அந்த வருமானத்த நம்பிய பேபி நடிகை.. கோதாவில் இறங்கி, நோ யூஸ் ஏடாகூடமா சிக்கிட்டாரே!

அந்த வருமானத்த நம்பிய பேபி நடிகை.. கோதாவில் இறங்கி நோ யூஸ் ஏடாகூடமா சிக்கிட்டாரே!

திரைப்படங்களில் நடிக்கக்கூடிய நடிகைகள் தற்போது திரைத்துறையில் அதிகரித்து இருக்கும் போட்டிகளை சமாளித்து தங்களை நிலை நிறுத்திக் கொள்ள பல்வேறு வகைகளை கையாண்டு வருகிறார்கள்.

இந்த போக்கானது தற்போது திரையுலகத்தில் அதிகரித்து இருப்பதை அடுத்து இளம் நடிகைகள் முதற்கொண்டு வளர்ந்து முன்னணி நிலையில் இருக்கும் நடிகைகள் கூட இது போன்ற விஷயத்தை நம்பி களம் இறங்குவது வாடிக்கையாக்கி விட்டது.

அந்த வருமானத்தை நம்பிய பேபி நடிகை..

அந்த வகையில் திரைப்பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் பேபி நடிகை ஓருவர் அது போன்ற சைடு பிசினஸை நம்பி களம் இறங்கி அதிக அளவு சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சில நபர்களிடம் சிக்கி என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது தவித்து வருவதாக புகைச்சல் ஏற்பட்டுள்ளது.

யார் எப்படி போனால் என்ன.. எனக்குத் தேவை பணம் என்ற மன ரீதியில் செயல்படுகின்ற இந்த நடிகை யாருடைய நலனையும் இது வரை கண்டு கொண்டதே இல்லை. பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் என்று சொல்லும் பழமொழிக்கு ஏற்ப பணத்திற்காக எதையும் செய்ய தயங்காதவர் இந்த பேபி நடிகை.

இதனை அடுத்து சமீபத்தில் இவர் பல கோடி மதிப்புள்ள டீலிங்கில் ஈடுபட்டு வருவதாக பேசி வருவதெல்லாம் அண்டா புழுகு என்று கருத்துக்கள் வந்திருப்பதோடு மட்டுமல்லாமல் அந்த பேபி நடிகையைப் பற்றியும் இணையங்களில் பல்வேறு தகவல்கள் வெளி வந்துள்ளது.

கோதாவில் இறங்கி நோ யூஸ்..

பேபி நடிகை ஆரம்பகாலத்தில் இருந்தே எல்லாவற்றையும் ஏடாகூடமாக செய்ததை அடுத்ததாக இவரது காதல் கணவரும் இவரை விட்டு விலகி விட்டதாக சொல்லி வருகிறார்கள்.

மேலும் விவரம் அறிந்த நபர்கள் யார் சொன்னாலும் கேட்காமல் எல்லாவற்றையும் செய்து வருவதாக சொல்லி இருக்கிறார்கள்.

கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விட்டதாக சொல்ல முடியுமா? அது போல எந்த ஒரு விஷயத்தையும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்துப் பார்க்காமல் கண் மூடித்தனமாக செய்து வரும் இவர் தனக்கு தோன்றியதை மட்டுமே செய்து இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் எடுத்துச் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவம் இல்லாத பேபி நடிகை தான் நினைத்ததை மட்டுமே செய்வதோடு மட்டுமல்லாமல் அவரோடு யார் விவாதம் செய்தாலும் வெல்ல முடியாது.

அந்த வகையில் சினிமா வாய்ப்புகள் குறைந்து வருவதை அடுத்து சில நடிகைகள் தொழில் முனைவர்களாக பல்வேறு தொழில்களில் முதலீடு செய்யக்கூடிய நேரத்தில் இந்த நடிகையும் பிசினஸில் களம் இறங்க ஆர்வம் காட்டி இருக்கிறார்.

ஏடாகூடமா சிக்கிய விஷயம்..

அதுவும் எப்படிப்பட்ட பிசினஸ் தெரியுமா? இயற்கைக்கும் மக்களுக்கும் கேடு விளைவிக்க கூடிய விஷயங்களைப் பற்றி எந்த வித கவலையும் இல்லாமல் காற்று அடிக்கும் போதே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையோடு பல தவறான பிசினஸ்களில் தலையை விட்டு மாட்டி முழித்து வருகிறார்.

இவர் இப்படி தவறான பாதையில் செல்ல காரணமே இவருடன் நெருக்கமாக இருக்கும் நபர் ஒருவர் தான். விரைவில் இந்த பேபி நடிகை சிக்கல் சிக்கி தவிப்பார் என அவரது கணவரும் அவரது நலம் விரும்பிகளும் அட்வைஸ் செய்தும் நோ யூஸ் என்று சொல்லிவிட்டார்கள்.

தற்போது இந்த விஷயம் இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் பேபி நடிகையின் செயல் குறித்து அறிந்து கொண்ட அனைவரும் முகம் சுளித்து விட்டார்கள்.