இதை விட சின்ன உள்ளாடை இனிமே தான் செய்யணும்.. மோசமான கவர்ச்சியில் வானத்தை பார்க்கும் சாக்‌ஷி அகர்வால்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தும் கூட கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருபவர் சாக்‌ஷி அகர்வால். பிக்பாஸ் மாதிரியான சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகும் கூட சாக்‌ஷி அகர்வாலுக்கு மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் பெரிதாக அதிகரிக்கவில்லை.

இருந்தாலும் தமிழ், கன்னடம், மலையாளம் என்று பழமொழிகளிலும் நடிப்பதற்கு முயற்சி செய்து வருகிறார் சாக்ஷி அகர்வால். சினிமாவிற்கு வருவதற்கு முன்பு ஐடி துறையில் பணிபுரிந்து வந்த சாக்‌ஷி அகர்வால் இன்ஃபோசிஸ் மாதிரியான பெரும் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தார்.

மாடலிங் துறையில் அறிமுகம்:

அந்த சமயத்தில் அவருக்கு மாடலிங் துறையில் ஒரு விளம்பரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. நண்பர்கள் மூலம் கிடைத்த அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அந்த விளம்பரத்தில் நடித்தார் சாக்‌ஷி அகர்வால்.

அதற்குப் பிறகு அதன் மூலம் அவருக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக நடிப்பின் மீது ஆர்வம் கொள்ள துவங்கினார். பிறகு தன்னுடைய ஐடி வேலையை விட்டுவிட்டு தமிழ் சினிமாவில் முயற்சி செய்யத் தொடங்கினார்.

அப்பொழுதுதான் இயக்குனர் அட்லி தனது முதல் திரைப்படமான ராஜா ராணி திரைப்படத்தை இயக்கி வந்தார். அதில் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு சாக்ஷி அகர்வாலுக்கு கிடைத்தது. அந்த படத்தில் நடித்த பிறகு கன்னடம் மலையாளம் என்று வேறு மொழி படங்களிலும் வாய்ப்பு கிடைத்தது.

திரைத்துறையில் வரவேற்பு:

தமிழிலும் கக போ, காலா, விசுவாசம், டெடி மாதிரியான திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தால் சாக்ஷி அகர்வா.ல் ஆனால் கதாநாயகியாக மட்டும் எந்த திரைப்படத்திலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

சினிமாவிற்கு வந்த ஆரம்பம் முதலே கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்தது. இந்த நிலையில் விஜயின் தந்தையான எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய நான் கடவுள் இல்லை திரைப்படத்தில் மட்டும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக சமுத்திரகனி நடித்திருந்தார். அதற்குப் பிறகும் வாய்ப்புகளை பெற்று வருகிறார் சாக்‌ஷி அகர்வால். பகிரா திரைப்படத்திற்கு பிறகு இன்னும் அவரது நடிப்பில் திரைப்படம் எதுவும் வெளியாகவில்லை.

இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் சாக்ஷி அகர்வால். சமீபத்தில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு அதிக கவர்ச்சியுடன் கூடிய டூ பீஸ் உடையுடன் கூடிய புகைப்படங்களை இணையதளத்தில் வைரல் ஆக்கி வருகிறார்.