Zoom போ.. Zoom போ.. உள்ளே இருப்பது வெளியே தெரிய ராஷ்மிகா மந்தனா.. பதறிய ரசிகர்கள்..!

ஒரே ஒரு பாடல் மூலமாக  தமிழ், மலையாளம், தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் அதிக பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. சில நடிகைகளுக்கு மட்டுமே இந்த மாதிரியான அதிசய சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

ஒரே ஒரு பாடல் அவர்களுக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்து விடும் இதே போலதான் நடிகை கீர்த்தி ஷெட்டியும் தென்னிந்தியாவில் பிரபலம் அடைந்தார். ராஷ்மிகா மந்தனா நிறைய திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட அவர் நடித்த திரைப்படமாக பெரும்பாலும் தென்னிந்திய மக்களால் அறியப்படுவது கீதா கோவிந்தம் திரைப்படம்.

கீதா கோவிந்தம் திரைப்படத்தில் படம் முழுக்க முறைத்துக் கொண்டிருக்கும் ஒரு கோபமான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் கூட அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஒரு கதாபாத்திரமாக ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திரம் இருந்தது.

கீதா கோவிந்தம் கொடுத்த வெற்றி:

கீதா கோவிந்தம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நிறைய பட வாய்ப்புகளை பெற்றார் ராஷ்மிகா, அந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு கதாநாயகியாக நடித்திருந்தார் ராஷ்மிகா, அது என்ன ராசியோ தெரியவில்லை தொடர்ந்து அடுத்த டியர் காம்ரேட் திரைப்படத்திலும் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்தார் ராஷ்மிகா.

அந்த திரைப்படமும் நல்ல வெற்றியை கொடுத்தது. இவர்கள் இருவரும் காம்போ போட்டு நடித்தாலே அந்த திரைப்படத்திற்கு வெற்றிதான் என்று பேச்சுக்கள் வர தொடங்கின. இந்த வரவேற்பு காரணமாக தமிழ் சினிமாவிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

தமிழில் முதன்முதலாக நடிகர் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படத்தில் வாய்ப்பை பெற்றார் ரஷ்மிகா மந்தனா. சுல்தான் திரைப்படம் முழுக்கவே பாவாடை தாவணி கட்டிக்கொண்டு மிகவும் அழகான ஒரு பெண்ணாக ராஷ்மிகா நடித்து வந்தார்.

அதற்கு முன்பு நடித்த தெலுங்கு திரைப்படங்களில் எல்லாம் அதிக கவர்ச்சியாக நடித்திருந்தாலும் கூட பாவாடை தாவணியிலும் அவரை மிக அழகாக காட்ட முடியும் என்பதை நிரூபித்து இருந்தார் சுல்தான் திரைப்படத்தின் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன். அந்த திரைப்படமும் ஓரளவு வரவேற்பு பெற்றது.

தமிழில் வரவேற்பு:

ஆனால் இந்திய அளவில் ராஷ்மிகா மந்தனாவை பிரபலமாகியது  புஷ்பா திரைப்படம்தான். தற்சமயம் புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா இதற்கு நடுவே நடிகர் விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்திலும் இவர் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிடும் ராஷ்மிகா தற்சமயம் டூ பீஸ் உடலில் கடற்கரை ஓரமாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன. அதிக துளை கொண்ட ஆடை ஒன்றை அவர் அதில் அணிந்து இருக்கிறார் அதில் அவருடைய உள்ளாடை தெரிகிறது என்று கூறி அந்த புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர் சினிமா ரசிகர்கள்.