விவாகரத்தான பிறகு கர்ப்பம்..? சமந்தா வெளியிட்ட பதிவால் ஷாக்கான ரசிகர்கள்..! என்ன நடக்குது இந்த ஊர்ல..?

ஆரம்பத்தில் சாதாரண நடிகையாக அறிமுகம் ஆகி அதற்கு பிறகு கவர்ச்சி நடிகையாக மாறியவர் நடிகை சமந்தா. நடிகர் அதர்வா கதாநாயகனாக நடித்த பானா காத்தாடி திரைப்படம் மூலமாக கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதற்கு பிறகு மாஸ்கோவின் காவேரி என்கிற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படங்களில் எல்லாம் நடிக்கும் பொழுது மிக சிறு வயது பெண்ணாக இருந்தார் சமந்தா. ஆனால் அந்த படங்களில் எல்லாம் அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைத்ததில்லை இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் சமந்தா நடித்த நான் ஈ திரைப்படம்தான் தெலுங்கு மற்றும் தமிழ் இரண்டிலும் அவருக்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது.

கவர்ச்சி நடிகையாக மாறிய சமந்தா:

அந்த திரைப்படத்திற்கு பிறகு வரவேற்பு பெற்ற நடியாக மாறினார் சமந்தா ஒரு காலகட்டம் வரை பெரிதாக கவர்ச்சி காட்டி நடிக்காமல் இருந்து வந்தார் சமந்தா. அஞ்சான் திரைப்படத்தில் திடீரென ஒட்டுமொத்த கவர்ச்சியில் இறங்கினார் சமந்தா.

அதற்கு காரணம் அப்பொழுது இருந்த சர்ச்சைதான் சமந்தாவிற்கு தோல் தொடர்பான ஒரு நோய் இருக்கிறது என்றும் அதனால்தான் அவர் மூடி மறைத்து நடிக்கிறார் என்றும் ஒரு பேச்சு இருந்து வந்தது. அதனை உடைக்க வேண்டும் என்பதற்காக முழுவதுமாக கவர்ச்சி காட்டி அஞ்சான் திரைப்படத்தில் நடித்திருந்தார் சமந்தா.

அது பலருக்குமே அதிர்ச்சியை கொடுத்திருந்தது. இருந்தாலும் அவருக்கு தொடர்ந்து விஜய், சூர்யா, தனுஷ் மாதிரியான நடிகர்கள் திரைப்படத்தில் வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டுதான் இருந்தன. இதற்கு நடுவே நாகார்ஜுனாவின் மகனான நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா.

திருமண வாழ்க்கை:

ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையே சுமுகமான உறவு நிலவாத காரணத்தினால் பிறகு பிரிந்து விட்டனர். அதற்குப் பிறகு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சமந்தா சில நாட்கள் தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்தார்.

இதனால் பெரிய பெரிய வாய்ப்புகள் கூட அவருக்கு கிடைக்காமல் போனது இந்த நிலையில் தற்சமயம் வெப் சீரிஸ் மூலமாக மறுபடியும் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுப்பதற்கு தயாராகி வருகிறார் சமந்தா.

சமீபத்தில் சிட்டாடல் என்னும் வெப் சீரிஸில் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் சமந்தா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று அதிக பிரபலம் ஆகி வந்தது. காரில் இருந்து கொண்டு கையில் ஏதோ ஒரு ஸ்லிப்பை சமந்தா காட்டும் புகைப்படம் தான் அதிக வைரலாகி வந்தது.

அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அதை பிரகனன்சி டெஸ்ட் ஸ்லீப் அதைதான் சமந்தா எடுத்து நீட்டுகிறார். அவருக்கு கணவர் இல்லாத பொழுது எப்படி கர்ப்பம் அடைந்தார் என்று பேச தொடங்கினர். அதற்கு பிறகுதான் தெரிந்தது அது உடல் எடையை சோதனை செய்யும் பொழுது வரும் அதிர்ஷ்ட சீட்டு ஆகும். அதில் ஆகஸ்ட் 1ஆம் தேதி டேட் போகப் போறீங்க என்று எழுதி இருந்தது. அதனை எடுத்து தான் சமந்தா அப்படி காட்டி இருக்கிறார் அதற்குள் ரசிகர்கள் அதை தவறாக புரிந்து கொண்டு விட்டனர்.