வாய்க்கு வந்ததை அளந்து விட்ட நயன்.. நிஜத்தை தோலுரித்த மருத்துவர்.. குழந்தை பாக்கியத்திற்கு தடை.. தெறித்து ஓடிய நயன்தாரா..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கக்கூடிய நயன்தாரா லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.

தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்திருக்க கூடிய இவர் அண்மையில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானோடு இணைந்து ஜவான் படத்தில் நடித்ததின் மூலம் பாலிவுட் திரை உலகிற்கு என்ட்ரி கொடுத்தார்.

வாய்க்கு வந்ததை அளந்து விட்ட நயன்..

அண்மையில் பிரபல நடிகை சமந்தா நெபுலைசர் மூலமாக ஹைட்ரஜன் பெராக்ஸைடு சுவாசிக்க பரிந்துரை செய்திருந்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதோடு அவருக்கு அறிவியல் அறிவு இல்லை என்று சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மருத்துவர் பதில் அளித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக சமந்தா பதிவு ஒன்றை வெளியிட அதற்கு பிலிப்ஸ் பதிலளிக்க இருதரப்பக்கம் வார்த்தை மோதல் வலுத்தது.

இந்த சர்ச்சை சற்று ஓய்ந்திருக்கும் நிலையில் இப்போது நயன்தாரா அடுத்த சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போட்டு இருக்கிறார்.

நிஜத்தை தோலுரித்த மருத்துவர்..

நயன்தாரா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட செம்பருத்தி குறித்து பதிவானது பலராலும் படிக்கப்பட்டு மிகவும் பிடித்தமானது விஷயங்கள் ஒன்றாக மாறிவிட்டது.

இந்த செம்பருத்தி பூவை இவர் ஆயுர்வேத முறையில் இதனை நீண்ட காலமாக பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் செம்பருத்திப் பூவானது சர்க்கரை நோய் கொலஸ்ட்ரால் உயர்ந்த அழுத்தத்திற்கு இது தீர்வு தரும் என நயன்தாரா இருந்தார்.

 

மேலும் பருவ காலங்களில் செம்பருத்தி டீ மிகவும் நல்லது என்றும் நோய் எதிர்ப்பு சக்தியை சீராக வைத்திருக்கும் என அவர் சொன்ன பதிவை லட்சக்கணக்கானோர் லைக் செய்ததோடு தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்தனர்.

 

இங்குதான் தொடங்கியது சர்ச்சை. இதை எடுத்து பதிவிட்ட மருத்துவர் செம்பருத்தி பூவால் ஏற்படும் தீமைகள் பற்றி சுட்டிக்காட்டி இருந்தார்.

குழந்தை பாக்கியத்திற்கு தடை..

அதுமட்டுமல்லாமல் அதில் செம்பருத்தி டீ சுவையானது என சொன்னதோடு நிறுத்தி இருக்கலாம் என டாக்டர் சொல்லிவிட்டு அதனால் ஏற்படும் தீமைகள் பற்றி கூறியது பெரும் அதிவளைகளை ஏற்படுத்தி உள்ளது.

செம்பருத்தி டீ யை தொடர்ந்து வருவது பருகுவதால் பெண்களுக்கு பூ பெய்வதில் தாமதம் ஏற்படும் அத்தோடு குழந்தை பாக்கியத்திற்கு இது தடையாக இருக்கும் இவர் சொன்ன விஷயம் எதுவும் அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆகவில்லை என்று கூறினார்.

 

தெறித்து ஓடிய நயன்தாரா..

இதனை அடுத்து நயன்தாரா டாக்டருக்கு தக்க பதில் சொல்ல முடியாமல் போட்டிருந்த பதிவை டெலிட் செய்து தலை தறிக்க ஓடி இருக்கிறார் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் இணைய வாசிகள் அனைவரும் தற்போது இது போன்ற கருத்துக்களை வெளியிடுவதற்கு முன்பு பலமுறை யோசித்து பல்வேறு குறிப்புகளை கவனத்தில் கொண்டு வெளியிடுவது மிகவும் நல்லது என்று சொல்லி இருக்கிறார்கள்.

ஏனெனில் பிரபலங்கள் சொல்வதைக் கேட்டு நடக்கின்ற மிகப்பெரிய ரசிகர்கள் இருக்கும் வேளையில் ரசிகர் வட்டாரம் தவறான முறையில் இதனை பயன்படுத்தி உடல் நலக்குறைவு ஏற்படாமல் இருக்க இது உதவி புரியும் என சொல்லலாம்.