என்னை அந்த கோலத்தில் பார்க்க அப்படி என்ன அவசரம்.. அந்த கேள்விக்கு மாளவிகா மோகனன் பதில்…!

தமிழ் சினிமாவில் எடுத்த எடுப்பிலேயே பெரும் நடிகர்கள் திரைப்படத்தில் நடித்து அதன் மூலமாக அதிகமாக வரவேற்பை பெற்றவர் நடிகை மாளவிகா மோகனன். மலையாளத்தில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் நடிகை மாளவிகா மோகனன்.

நிறைய திரைப்படங்களில் இவர் மலையாளத்தில் நடித்திருக்கிறார். ஓரளவு மலையாள சினிமா ரசிகர்களால் அடையாளம் காணப்படும் நடிகையாகதான் அவர் இருந்திருக்கிறார். இந்த நிலையில்தான் தமிழ் சினிமாவின் மீது ஆர்வம் கொண்டு தமிழுக்கு நடிக்க வந்தார் நடிகை மாளவிகா மோகனன்.

தமிழில் அறிமுகம்:

பொதுவாகவே மலையாள சினிமாவை விட தமிழ் சினிமாவில் சம்பளம் என்பது அதிகமாக இருந்து வருகிறது. இந்த காரணத்தாலேயே நடிகர்களும் நடிகைகளும் தமிழ் சினிமாவில் வந்து முயற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் மாளவிகா மோகனன் பேட்ட திரைப்படத்தில் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பேட்ட திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார் மாளவிகா மோகனன். அதற்குப் பிறகு அவருக்கு மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

முதல் படமே ரஜினிகாந்த் திரைப்படம். அதற்கடுத்த திரைப்படம் விஜய்யின் திரைப்படமாக அமைந்தது. மாஸ்டர் திரைப்படத்தை பொறுத்தவரையில் அதில் மிக முக்கிய கதாபாத்திரம் என்றெல்லாம் சொல்லும் அளவிற்கு மாளவிகா மோகனுக்கு கதாபாத்திரம் இருக்கவில்லை.

சொல்ல போனால் இண்டர்வல் காட்சிகளுக்குப் பிறகு மாளவிகா மோகனனை படத்தில் பார்க்க முடியாது. ஆனால் அவருடைய நடிப்பு கொஞ்சம் விமர்சனத்திற்கு உள்ளானது. மாஸ்டர் படத்தில் அவர் ஒழுங்காக நடிக்கவில்லை என்பது ஒரு குற்றச்சாட்டாக இருந்தது.

விமர்சனத்துக்கு உள்ளான நடிப்பு:

இந்த நிலையில் அடுத்து தனுஷிற்கு ஜோடியாக மாறன் என்கிற திரைப்படத்தில் நடித்தார் மாளவிகா மோகனன். அதற்குப் பிறகு திரும்ப மலையாளத்திற்கு சென்று அங்கு கிருஸ்டி என்றொரு படத்தில் நடித்தார்.

அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்சமயம் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் தங்கலான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார்.

அவரது நடிப்பு எப்படி இருக்கும் என்பது ரசிகர்கள் மத்தியில் பேச்சாக இருந்து வருகிறது. இந்த நிலையில் மாளவிகா மோகனன் அடிக்கடி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அடிக்கடி புகைப்படங்களையும் வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் எப்பொழுது நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என மாளவிகா மோகனிடம் கேட்டிருக்கிறார். அதற்கு பதில் அளிக்க மாளவிகா மோகனன் நான் திருமணம் செய்து கொள்வதற்கு எதற்கு இவ்வளவு நெருக்கடி கொடுக்கிறீர்கள் அப்படி என்ன உங்களுக்கு அவசரம் என்று கேட்டு பதில் அளித்திருக்கிறார்.