உரலில் அகப்பட்டா.. உலக்கை கிட்ட குத்து வாங்கித்தானே ஆகணும்.. கவர்ச்சி ரூட்டில் நடிகை செந்தில்குமாரி..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து துணை கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை செந்தில்குமாரி. பசங்க திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக அதிக வரவேற்பு பெற்றவர் செந்தில்குமாரி.

மொத்த படத்திலேயே போதும் பொண்ணு என்கிற அந்த கதாபாத்திரம் அதிகமாக பேசப்பட்ட கதாபாத்திரமாக இருந்தது. அதனை தொடர்ந்து சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளையும் பெற துவங்கினார் செந்தில்குமாரி.

திரைப்படத்தில் வரவேற்பு:

திரை பிரபலங்கள் பலருமே அவரது நடிப்பை பாராட்டினர். அதனை தொடர்ந்து அதிகபட்சம் கிராமத்து கதாபாத்திரத்திற்கு ஆள் வேண்டுமென்றால் அதற்கு செந்தில்குமாரியைதான் அழைத்து வந்தனர் இயக்குனர்கள். அதனை தொடர்ந்து ஒஸ்தி, மெர்சல் மற்றும் கோலிசோடா போன்ற படங்களில் வாய்ப்புகளை பெற்று நடிக்க தொடங்கினார்.

பெரும்பாலும் பெரிய நடிகர்கள் திரைப்படத்திலேயே இவருக்கு எளிதாக வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல் சின்ன திரையிலும் கவனம் செலுத்த துவங்கினார் செந்தில்குமாரி.

ஏனெனில் குடும்ப பாங்கான கதாபாத்திரமாக தொடர்ந்து நடிப்பதால் சீரியலில் அது அதிக வரவேற்பை பெரும் என்று சீரியலுக்கு வர நினைத்தார் அந்த வகையில் சின்ன திரையில் கனா காணும் காலங்கள் தொடரில் டீச்சராக இவர் நடித்திருந்தார் ஆனால் அதில் அவ்வளவாக கவனத்தை பெறவில்லை.

சீரியலிலும் சான்ஸ்:

அதற்கு பிறகு விஜய் டிவியில் வெளியான சரவணன் மீனாட்சி சீரியலில் தெய்வானை என்கிற கதாபாத்திரத்தில் நடித்துடன் மூலமாக ரசிகர்கள் மத்தியில் கொஞ்சமாக பிரபலமானார். தற்சமயம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக நடித்து வருகிறார்.

அதேபோல சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலிலும் இவர் நடித்து வருகிறார். இந்த இரண்டு சீரியல்களுமே டி.ஆர்.பியில் டாப் 10 சீரியல்களில் உள்ள சீரியல்களாக இருப்பதால் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறார் செந்தில்குமாரி.

ஆனால் சினிமா வாய்ப்பை பொருத்தவரை முன்பு கிடைத்த அளவிற்கு அவருக்கு இப்போது வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆரம்பத்தில் ட்ரெடிஷனலாக நடித்து வந்தாலும் தற்சமயம் கவர்ச்சியாக நடிப்பதற்கு இவர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இத்தனைக்கும் அவருக்கு ஏற்கனவே வயதாகிவிட்டது, இனி கவர்ச்சியாக நடித்து எப்படி பட வாய்ப்பு பெற போகிறார் என்று ஒரு பக்கம் கேள்வி இருந்தாலும் சினிமாவை பொறுத்தவரை கவர்ச்சியாக நடிப்பதற்கு வயது ஒரு தடை கிடையாது என்பதால் கண்டிப்பாக இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவும் சான்ஸ் இருக்கிறது, என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.