துபாய்ஓட்டலில் அந்த நடிகையா.. நம்பவே முடியலையே.. சிக்கி தவிக்கும் 50 பேரு.. திடுக்கிடும் தகவல்..!

சினிமா துறையில் இந்த அளவு மோகம் இருக்குமா? என்று கேட்டால் அது சற்று யோசிக்க வைக்கும். ஏனென்றால் அதிக அளவு மக்கள் விரும்புகின்ற துறையாக சினிமாத்துறை உள்ளது. ஏனெனில் இந்த துறையில் தான் சிறிது காலத்திலேயே அதிக அளவு லாபமும் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் பிரபலமும் ஆக முடியும்.

இந்த காரணத்தால் தான் திரைபடத்தில் நடிப்பதற்காக தினம், தினம் பல்வேறு வகையான நபர்கள் சினிமா துறையை நாடி நடிப்பதற்காக ஊரு விட்டு ஊரு வருகிறார்கள்.

துபாய் ஹோட்டலில் அந்த நடிகையா..

அப்படி ஊர் விட்டு ஊர் வந்து நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாய்ப்புகளைத் தேடி வரும் பல இளம் பெண்களின் வாழ்க்கை நினைக்க முடியாத அளவு சீர் அழிப்பது அதிகரித்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்த இளம் பெண்களின் வாழ்க்கையை சூரையாடிய கும்பல்கள் பற்றி பல்வேறு கதைகளை நீங்கள் இணையங்களில் படித்து தெரிந்து கொண்டிருக்கலாம்.

அந்த வகையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து பின் பாலியல் தொழிலில் சிக்கிய சில பெண்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அப்படித்தான் கடந்த ஆண்டு மும்பையில் இரண்டு தமிழ் பட நடிகைகள் உட்பட பல அப்பாவிப் பெண்களை போலீசார் மீட்டெடுத்தனர்.

இதில் சங்கடமான விஷயம் என்னவென்றால் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படும் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக செய்திகள் கசிந்துள்ளது.

அந்த வகையில் கேரளாவை சேர்ந்த 21 வயதை ஆன நடனக்கலைஞர் ஒருவர் இது சம்பந்தமான தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இந்தப் பெண் அப்படிப்பட்ட கும்பலில் மாட்டி தப்பித்து போலீசார் உதவியை பெற்றிருக்கிறார்.

நம்பவே முடியவில்லை..

இது பற்றி அந்தப் பெண் விரிவாக பேசும் போது குறும்பட இயக்குனர் பிரகாஷ்ராஜ் துபாயில் கலை நிகழ்ச்சி இருப்பதாக கூறி ஏராளமான துணை நடிகைகள் மற்றும் டான்ஸ் கலைஞர்களை துபாயில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் பாலியல் தொழில் செய்யும் கேரளாவை சேர்ந்த ஷீகல் என்பவர் ஆன்லைன் மூலம் நேர்காணல் நடத்தி இருக்கிறார்.

அந்த நேர்காணலில் வெற்றி பெற்றவர்கள் ஆறு மாத ஒப்பந்தத்தின்படி நான்கு இளம் பெண்களை துபாய்க்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அப்படி ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை டிவி சீரியல் நடிகைகள், துணை நடிகைகளை அனுப்பி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை அட்வான்ஸ் தந்திருக்கிறார்கள்.

சிக்கி தவிக்கும் 50 பேர் திடக்கிடும் தகவல்..

சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத சில நடிகைகள் மற்றும் துணை நடிகைகள் பணத்தினைப் பெற்றுக் கொண்ட நிலையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு இருக்கும் ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டு விஐபிகளோடு உல்லாசமாக இருக்க மிரட்டி இருக்கிறார்கள்.

இதற்கு எல்லாம் மூளையாக செயல்பட்டவர் புரோக்கர் ஷீகல். தற்போது அந்த நபர் உட்பட நான்கு பேரை கைது செய்து விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த விஷயத்தில் பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளது.

மேலும் இந்த சம்பவத்தில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என பேச்சுக்கள் அடிபடுகிறது. அத்துடன் இந்த பின்னணியில் பல முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என கோலிவூட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.