என்னோட அந்த உறுப்பை Zoom பண்ணி.. இதை பண்ணாங்க.. பனிமலர் பன்னீர்செல்வம் பேட்டி…!

திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு எப்படி ஒரு அந்தஸ்து, அங்கீகாரம் மற்றும் புகழ் மக்கள் மத்தியில் கிடைக்கிறதோ அது போலவே சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் தற்போது இருக்கிறார்கள். அந்த வரிசையில் செய்தி வாசிப்பாளராக திகழும் பனிமலர் பன்னீர்செல்வம் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

 

இவர் சின்னத்திரையில் செய்திகள் வாசித்ததோடு மட்டுமல்லாமல் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அந்த வகையில் இவர் தொகுத்து வழங்க கூடிய நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர் படை காத்திருக்கும்.

பனிமலர் பன்னீர்செல்வம்..

கொங்கு தமிழ் பேசும் கோவையை சேர்ந்த இவர் முதல் முதலில் பாலிமர் தொலைக்காட்சிகள் தான் செய்தி வாசிப்பாளராக அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து பல மீடியாக்களில் பணிபுரிந்து ரசிகர் வட்டாரத்தை விரிவு படுத்திக் கொண்டார்.

இவர் தன் மனதுக்கு தவறு என்று பட்டதை போல்டாக நின்று பேசக்கூடிய பெண்களில் ஒருவராக திகழக்கூடிய பனிமலர் பன்னீர்செல்வம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பதோடு தனது ரசிகர்களை மனதில் வைத்து போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களையும் வெளியிடுவார்.

பெண்ணியல் வாதியான இவர் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் விஷயங்களைப் பற்றி மிகச் சிறப்பாக எடுத்து சொல்வதோடு மட்டுமல்லாமல் பெரியாரிசத்தையும் ஆதரித்து பேசுவதோடு பல பதிவுகளையும் போடுவார்.

என்னோட இந்த உறுப்ப ஜூம் பண்ணி..

இந்நிலையில் பனிமலர் பன்னீர்செல்வம் அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசி இருக்கிறார். அந்த பேட்டியில் அவர் பேசும் போது தனக்கு நடந்த மோசமான அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக பேசி அனைவரையும் யோசிக்க வைத்திருக்கிறார்.

இதற்கு காரணம் இவர் புடவை விளம்பரம் ஒன்றில் நடிக்கும் போது இவர் புடவையோடு திரும்பிய சமயத்தில் இவரது வயிறு மற்றும் மார்பு பகுதிகள் வெளியே தெரிந்ததை ஜூம் செய்து மோசமாக எடிட் செய்த நபர் ஒருவர் அதை ட்விட்டரில் பதிவேற்றி இருக்கிறார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத பனிமலர் பன்னீர்செல்வம் இந்த விஷயத்தை தன் நண்பர்களிடம் அழுது புலம்ப என்னதான் தைரியமாக பெண்ணாக இருந்தாலும் இது போன்ற நிகழ்வுகளால் நிலைகுலைந்து போவதாக சொல்லி இருக்கிறார்.

எத பண்ணாங்க ஓபன் டாக்..

மேலும் இப்படி செய்த நபருக்கு இதனால் என்ன லாபம் கிடைக்கிறது என்பதையும் கேட்டிருக்கக்கூடிய இவர் இப்படி செய்வது தவறு என்பது புரியாமல் தான் செய்கிறார்களா இல்லை வேண்டுமென்றே செய்கிறார்களா என்பது போன்ற கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

இந்நிலையில் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

இந்த சூழ்நிலையில் பனிமலர் பன்னீர்செல்வம் பகிர்ந்த இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு படிக்கும் விஷயங்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள்.

மேலும் பனிமலர் பன்னீர் செல்வத்திற்கே தெரியாமல் அந்த உறுப்பை ஜூம் பண்ணி பதிவிட்ட விஷயத்தால் பரபரப்பு ஏற்பட்டதோடு அதற்கு பேட்டி கொடுத்திருக்கும் பனிமலர் பன்னீர்செல்வத்தின் பேச்சானது தற்போது ட்ரெண்டிங் ஆகிவிட்டது.

எனவே பெண்கள் அனைவரும் மிகுந்த ஜாக்கிரதையோடு இருக்க வேண்டும். ஏனென்றால் ஒவ்வொருவரின் கையிலும் அலைபேசி இருப்பதால் கட்டாயம் எதிர்பாராத சூழ்நிலையில் கேமரா கண்கள் மட்டுமல்லாமல் ஆண்களின் கண்களும் உங்களை படம் பிடிக்கும் என்பதால் உஷாராக இருங்கள்.