சமந்தாவின் விவாகரத்து பற்றி சரியாக சொன்ன ஜோதிடர்.. இப்போ நாகசைதன்யாவின் இரண்டாம் திருமணம் பற்றி..

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகை சமந்தா இளைஞர்களின் கிரஸ்சாக திகழ்கிறார். மேலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து இருக்கும் இவர் தெலுங்கு நடிகரான நாகச் சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்ற கதைகள் உங்களுக்கு தெரியும்.

இதனை அடுத்து மர்ம நோயால் பாதிக்கப்பட்ட இவர் திரை உலகை விட்டு சிறிது காலம் விலகி இருந்த பின்னர் சிகிச்சைக்காக பல வெளிநாடுகளுக்குச் சென்று தற்போது அந்த நோயின் தாக்கத்திலிருந்து சற்று விடுபட்டு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

நடிகை சமந்தா..

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்திருக்கும் நடிகை சமந்தா தற்போது பாலிவுட்டிலும் தனது அபார திறமையை காட்டி வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக செயல்படக்கூடிய இவரை பற்றி தற்போது வெளி வந்திருக்கும் சில தகவல்கள் இணையங்களில் ஹாட் டாப்பிக்காக மாறி உள்ளது.

இதற்கு காரணம் இவர் வேண்டாம் என்று விவாகரத்து பெற்ற நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம் தொடர்பாக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளது.

இதனை உறுதி செய்யக்கூடிய வகையில் நடிகர் நாக சைதன்யாவின் அப்பாவும் தெலுங்கு சூப்பர் ஸ்டாருமான நாகார்ஜுனா தனது எக்ஸ் தள பக்கத்தில் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

இதை அடுத்து இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டது என்று பலரும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

சமந்தாவின் விவாகரத்து பற்றி சொன்ன ஜோதிடர்..

இந்நிலையில் நாக சைதன்யா 2017 ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களது மன வாழ்க்கை நான்கு ஆண்டுகளில் முடிவுக்கு வந்ததை அடுத்து 2021 தெரிந்தார்கள்.

இவர்களின் விவாகரத்துக்கு பல்வேறு வகையான காரணங்கள், கூறப்பட்ட நிலையில் தனக்கு ஜீவனாம்சமாக நாகசெய்தன்யா தரப்பில் கொடுக்கப்பட்ட பல கோடி ரூபாய் தொகையை வேண்டாம் என்று உதவியவர் நடிகை சமந்தா.

இதை அடுத்து பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த சோபிதா துளிபாலா உடன் டேட்டிங் செய்து வருவதாக சொல்லப்பட்ட நிலையில் இதற்கு இருவரும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் இருந்ததை அடுத்து தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் தெலுங்கு சினிமா உலகில் மிக முக்கிய நபராக கருதப்படக்கூடிய ஜோசியர் வேலுசாமி தெலுங்கு சினிமா உலகம் மட்டுமல்லாமல் ஆந்திராவிலேயே மிகச் சிறந்த ஜோதிடராக திகழ்கிறார்.

இப்போ நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணம் பற்றி..

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டு இருக்கிறார் இதில் நாகச் சைதன்யா மற்றும் சோபிதாவின் ஜாதகங்களை ஆய்வு செய்வதில் அவர்கள் எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்று மிக சிறப்பாக சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில் இந்த ஜோசியர் வேணு சுவாமி ஏற்கனவே நாகச்செய்தன்யா மற்றும் சமந்தாவின் விவாகரத்து குறித்து கணித்து சொன்னவர் நாளை இவர்களின் இரண்டாவது திருமணம் பற்றிய எதிர்காலத்தை என்ன சொல்லப் போகிறார் என்று அறிந்து கொள்ள அனைவரும் ஆவலாக இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.