உடம்பை வித்துட்டு.. இப்போ பொண்டாட்டியா.. இது பீடை புடிச்ச மூஞ்சி.. சோபிதாவை விளாசும் பிரபல மருத்துவர்..!

நேற்று பிரபல தெலுங்கு பிரபல நடிகரான நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதாவிற்கும் இடையே நிச்சயதார்த்தம் நடந்தது. கடந்த இரு நாட்களாக இதுதான் பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது. தெலுங்கு சினிமா உலகில் மூன்று தலைமுறைகளாக நடிப்பில் இருந்து வருபவர்கள் நாகார்ஜுனாவின் குடும்பத்தினர்.

இந்த நிலையில் தற்சமயம் நடந்திருக்கும் நாக சைதன்யாவின் இரண்டாம் திருமணம் குறித்த தகவல்கள் அதிக சர்ச்சை ஏற்படுத்தி வருகின்றன. இது குறித்து பிரபல  சினிமா விமர்சகர் காந்தாராஜ் பல விஷயங்களை பேசியிருக்கிறார்.

மூன்று தலைமுறை வாரிசுகள்:

அதில் அவர் கூறும் பொழுது நாகேஸ்வரராவ் அவர்களின் மகன்தான் நாகார்ஜுனா. நாகார்ஜுனாவின் மகன்தான் நாக சைதன்யா. நாகேஸ்வரராவை பொருத்தவரை அவர் ஒரு ஏக பத்தினி விரதம் கொண்டவர். அவரது மனைவியைத் தவிர வேறு எந்த ஒரு பெண்ணையும் ஏறெடுத்து கூட பார்க்காதவர் நாகேஷ்வரராவ்.

அவருக்கு சுத்தமாக தெய்வ நம்பிக்கை கிடையாது. ஏனெனில் முதன்முதலாக அவர் சினிமாவில் அறிமுகமானபொழுது அவரது முகத்தை பார்த்து அதிர்ஷ்டம் இல்லாத முகம் என்று பலரும் பழித்தனர். அப்பொழுது முதல் நாள் படப்பிடிப்பில் படப்பிடிப்பு நடக்க இந்த சமயத்தில் சரியாக கரண்ட் போய்விட்டது.

உடனே அங்கு இருந்தவர்கள் இது ஒரு பீடை புடிச்ச மூஞ்சி என்று நாகேஸ்வரராவை திட்டினார்கள். அப்போது முதல் நாகேஸ்வரராவிற்கு தெய்வ நம்பிக்கையே இல்லாமல் போனது. ஆனால் பெண்கள் விஷயத்தில் மிகவும் மரியாதையான நபராக நாகேஸ்வரராவ் இருந்தார்.

இரண்டாவது திருமணம்:

அதனால்தான் நாகார்ஜுனா இரண்டாவது திருமணம் செய்த பொழுது கூட அதற்கு விமர்சனம் கொடுத்தார் நாகேஸ்வரராவ். இப்படி இருக்கும் பொழுது நாகசைதன்யாவின் இரண்டாம் திருமணத்தைப் பொறுத்தவரை அந்த கதையே வேறு.

ஏனெனில் நாகார்ஜுனா குடும்பத்தை பொறுத்தவரை திருமணம் செய்த பிறகு அந்த பெண்கள் நடிக்க கூடாது என்பது முக்கியமான விஷயமாகும். நடிகை அமலா கூட நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்ட பிறகு நடிக்கவில்லை.

ஆனால் சமந்தாவை பொறுத்தவரை அவர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகும் நிறைய நெருக்கமான காட்சிகளில் படங்களில் நடித்தார். நிறைய கவர்ச்சியாகவும் நடித்தார். அதேபோல படுக்கையறை காட்சிகளிலும் நடித்தார்.

இப்படி எல்லாம் உடலை விற்று நடித்துவிட்டு பிறகு வீட்டிற்கு வந்து மனைவியாக இருந்தால் அதை யார் ஏற்றுக் கொள்வார்கள். மற்ற துறைகளை பொறுத்த வரை அங்கு பெண்கள் உடலை வித்து பிழைக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் சினிமா அப்படி கிடையாது அதனால்தான் சமந்தாவை விவாகரத்து செய்தார் நாக சைதன்யா என்று கூறுகிறார் காந்தாராஜ்.