ஒரு வயசுப்பொண்ணு என்னை இப்படி கூப்ட்டா.. சந்தேகமா இருக்கு.. நடிகை நித்யா தாஸ் பகீர்..!

பெரும்பாலான தமிழ் சீரியல்களில் நடித்து பிரபலமானவராக பார்க்கப்படுபவர் தான் நித்யா தாஸ்.

இவர் குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒரு பரப்பான “பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள்” தொடரில் நடித்த மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

நடிகை நித்யா தாஸ்

இந்த தொடரின் மூலம் தனக்கான தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட நித்யா தாஸ் தொடர்ச்சியாக அடுத்தடுத்த சீரியல்களில் கமிட்டாகி நடித்து வருகிறாள்.

கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் பிறந்து வளர்ந்த இவர் தமிழ் மற்றும் மலையாளம் மொழி தொலைக்காட்சி தொடர்களில் தொடர்ச்சியாக நடித்து பிரபலமான சீரியல் நடிகையாக இருந்து வருகிறார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு குருவாயூர் குருவாயூரில் அரவிந்த் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் .

இவரைப் பார்த்தால் இரண்டு குழந்தைங்களுக்கு அம்மா என்று சொல்லவே முடியாது அந்த அளவுக்கு தன்னுடைய இளமையான அழகில் எல்லோரையும் வசீகரித்தவர்.

இவரது கணவர் இந்தியன் ஏர்லைன்ஸில் விமான குழுவினராக பணியாற்றி வந்தார். ஒருமுறை 2005 ஆம் ஆண்டில் சென்னைக்கு செல்லும்போது விமானத்தில் ஏற்பட்ட சந்திப்பு தான் காதலாக மாறி பின்னர் கல்யாணத்தில் முடிந்திருக்கிறது.

என்னை இப்படி கூப்ட்டா

இதனிடையே இவர் கண்ணான கண்ணே என்ற சீரியலில் சன் தொலைக்காட்சியில் நடித்து வந்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாக வரும் இந்த காதல் நாடகத் தொடரில் நித்திய தாஸ் மிக முக்கிய கதாபாத்திரம் ஒன்று நடித்த வந்தார்.

இந்த தொடரில் நித்திய தாஸ் யமுனா கௌதம் என்ற ரோலில் நடித்து வந்தார். திடீரென அந்த சீரியல் இருந்து விலகிவிட்டார் இதற்கு காரணம் என்ன என்பது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

அதாவது கண்ணான கண்ணே என்ற தொலைக்காட்சி சீரியலில் ஹீரோயினுக்கு அம்மாவாக நடித்துக் கொண்டிருந்தார் நடிகை நித்யா தாஸ்.

திடீரென இந்த சீரியலில் இருந்து விலகிய அவர் இதற்கு என்ன காரணம் என்று கேட்டபோது ஒரு வயசு பொண்ணு என்னை அம்மா அம்மா என்று கூப்பிடும் பொழுது எனக்கு வயதாகிவிட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

சந்தேகமா இருக்கு

இதனால் நான் மன அழுத்தத்தையும் எதிர் கொண்டேன் இது சரியாக வராது என்று என்பதால் அந்த சீரியலில் இருந்து விலகி விட்டேன் என கூறினார் நடிகை நித்யா தாஸ்.

ஒரு வயசு பொண்ணு என்னை அம்மா என்று கூப்பிடும் பொழுது எனக்கு வயதாகி விட்டதோ என்று எனக்கே என் மீது சந்தேகமாக இருக்கிறது.

அது ஒரு மோசமான மனநிலை அந்த மனநிலையில் இருந்து வெளிவரவே கண்ணான கண்ணே சீரியலில் இருந்து விலகினேன் எனவும் பகீர் கிளப்பி இருக்கிறார் நடிகை நித்யாதாஸ்.