ஸ்கூல் படிக்கும் போதே போர்வைக்குள் அவனுடன்.. காதலன் குறித்து லட்சுமி மேனன் ஓப்பன் டாக்..!

கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்து இங்கு உச்சத்தை தொட்ட நடிகைகளில் முக்கியமானவர்தான் லட்சுமி மேனன்.

இவர் மிகவும் இளம் வயதிலேயே சினிமாவில் பிரபலமான நடிகையாக ஜொலிக்க ஆரம்பித்தார். பள்ளி படிப்பை படித்துக் கொண்டிருந்தபோதே சினிமாவில் ஹீரோயின் ஆக அறிமுகமானார்.

லட்சுமி மேனன்:

தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களில் நடித்து மிக குறுகிய காலத்திலேயே இளம் வயதிலேயே நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.

கேரளாவை பூர்விகமாகக் கொண்ட லட்சுமிமேனன் தமிழ், மலையாள மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

மலையாளத்தில் வெளிவந்த ரகுவிண்டெ சுவந்தம் ரசியா என்ற திரைப்படத்தில் முதன் முதலில் நடித்த அறிமுகமானார் .

அதை எடுத்து தமிழ் சினிமாவில் சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான லட்சுமிமேனனுக்கு முதல் படம் மிகப்பெரிய அடையாளமாக பார்க்கப்பட்டது .

அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது. தொடர்ந்து கும்கி திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய புகழ்பெற்றார்.

இளம் வயதிலே நட்சத்திர நடிகை:

கும்கி திரைப்படத்தில் லட்சுமி மேனன் தோற்றமும் அவரது நடிப்பும் பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

பிரபு சாலமோனின் இயக்கத்தில் வெளிவந்திருந்த அந்த திரைப்படம் லட்சுமிமேனனுக்கு மிகப்பெரிய அடையாள திரைப்படமாக பார்க்கப்பட்டது .

அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம் ஃபேர் விருது பெற்று கௌரவிக்கப்பட்டார் நடிகை லட்சுமிமேனன்.

தொடர்ந்து இவர் குட்டி புலி , மஞ்சள் பை ,பாண்டி நாடு, நான் சிகப்பு மனிதன் ,ஜிகர்தண்டா ,புலிக்குத்தி பாண்டி , சந்திரமுகி 2 உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இளம் வயதிலேயே வளம் வந்து கொண்டிருந்தார்.

தற்போது வெறும் 28 வயது ஆகும் நடிகை லட்சுமிமேனன் படிப்பில் கவனம் செலுத்தியதால் அவருக்கு சினிமா மார்க்கெட் குறைந்து போனது.

இதனால் வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது. இதை எடுத்து மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்க ஆரம்பித்த லட்சுமி மேனன் தனது சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளை தேடி வருகிறார்.

வட்ட முகத்துடன் ஹோம்லியான கதாபாத்திரங்களுக்கு பக்காவாக பொருந்துபவராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வசீகரித்து இழுத்தார் .

போர்வைக்குள் அவனுடன்..

இதனாலே அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைக்க ஆரம்பித்தது. இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால்…

நடிகை லட்சுமிமேனன் ஸ்கூல் படிக்கும்போது தன்னுடைய காதலனுடன் ரகசியமாக பேசிய சம்பவம் ஒன்று குறித்து பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

நான் ஸ்கூல் படித்துக் கொண்டிருந்தபோதே ஒருவரை காதலித்து வந்தேன் . அப்போது. நான் தான் காதலை அவரிடம் சொல்லினேன்.

உடனே அவரும் அதற்கு ஓகே சொல்லிவிட்டார். அதன் பின்னர் நாங்கள் அடிக்கடி பேசுவது வழக்கமாக இருந்து வந்தது .

அவுட்டிங் கூட சென்றதில்லை. இதனால் மொபைல் போனிலேயே தான் நிறைய கான்வர்சேஷன் போய்க்கொண்டிருக்கும்.

அப்போது என்னிடம் பட்டன் போன் தான் இருக்கும். அந்த நபருடன் யாரும் இல்லாத நேரத்தில் சென்று நான் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தேன் .

இரவு நேரங்களில் போர்வைக்குள் காதலனுடன் போன் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென என்னுடைய வீட்டில் இருந்த எல்லா லைட்டுக்களும் அனைத்து விட்டனர்.

உடனே போர்வைக்குள் இருந்து போனின் வெளிச்சம் வந்தது. அப்படி ஒரு முறை என்னுடைய அம்மாவிடம் நான் வசமாக மாட்டிக் கொண்டேன் .

அதன்பிறகு காதலனிடம் பேசுவதை குறைந்து போய்விட்டது. சினிமாவில் நான் நடிக்க வந்து விட்டேன்.

அதன் பிறகு அவரோட தொடர்பு முற்றிலும் விட்டுப் போனது என கூச்சமின்றி பேசியிருக்கிறார் லட்சுமிமேனன்.

பள்ளி படிக்கும்போதே காதலுடன் போர்வையை போர்த்திக் கொண்டு இந்த வேலை செய்து இருக்கீங்களா ?என அவரை ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.