அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு அழைத்தால் அந்த இடத்தில் முத்தம் கொடுப்பேன்.. பாப்ரி கோஷ் ஓப்பன் டாக்..!

தமிழ் பெங்காலி உள்ளிட்ட பலமொழி சீரியல்களில் நடித்து பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்படுபவர் தான் பாப்ரி கோஷ்.

முக்கியமாக சன் டிவியில் ஒளிபரப்பாகி மாபெரும் ஹிட் அடித்த பாண்டவர் இல்லம் சீரியலில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.

சீரியல் நடிகை பாப்ரி கோஷ்:

சீரியல் நடிகை ஆவதற்கு முன்னர் மாடல் அழகியாக தனது வாழ்க்கையை துவங்கிய இவர் 2009 இல் வெளிவந்த காலபேலா என்ற பெங்காலி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதை எடுத்து சன் டிவியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் சீரியல் இவருக்கு பெரும் புகழும் அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

அதன் பிறகு எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த டூரிங் டாக்கீஸ் என்ற தமிழ் படத்தில் ஹேமாவாக நடித்திருந்தார் .

இந்த திரைப்படத்தில் மனோபாலா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஓய், பைரவா, சக்க போடு போடு ராஜா, சர்க்கார், விசுவாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் இவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர் ஹிட் சீரியல்கள்:

இவரது சீரியல் என எடுத்துக்கொண்டோமானால் நாயகி, பாண்டவர் இல்லம், பூவே உனக்காக, மகராசி வானத்தைப்போல, சுந்தரி, கண்ணெதிரே தோன்றினாள், கௌரி உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் நடித்து பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்ட வருகிறார்.

பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் பாப்ரி கோஷுக்கு சீரியல் வட்டாரத்திலேயே. பலபேர் இவருக்கு ரசிகையாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சின்னத்திரை மற்றும் சினிமா வட்டாரங்களில் நடிகைகளுக்கு நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் கொடுமை குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

அப்படி ஒரு பேட்டியில் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பதற்கு சற்றும் தயங்காமல் ஒருவர் நம்மிடம் வந்து அட்ஜஸ்ட்மென்ட் பண்ணுங்க வாய்ப்பு தரேன் அப்படின்னு சொன்னா அவங்க கிட்ட எதுவுமே பேசக்கூடாது.

அந்த அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்த நபர் அதிர்ந்து போகும் அளவுக்கு அவரது வீட்டிற்கே சென்று விட வேண்டும்.

அந்த இடத்தில் முத்தம்:

அத்தோடு அவரது குடும்பத்தார் முன்பு அவரை கட்டியணைத்து கன்னத்தில் முத்தம் கொடுப்பேன். அப்படி செய்யும்போது அந்த வீட்டில் இருப்பவர்கள் ஏன் இப்படி பண்ற என்று என்னிடம் கேள்வி எழுப்பவர்கள்.

அப்போது இந்த நபர் படுகைக்கு என்னை அழைத்தார் அதனால் கேடு கெட்ட இந்த நபரின் வீட்டில் இருப்பவர்களுக்கு முன்னால்… அதாவது அவருடைய குழந்தைகள், மனைவி, உறவினர்கள் எல்லாரும் முன்னாடியும் இவர் பட வாய்ப்புக்காக என்னை படுக்கையை பகிர சொல்கிறார்.

அதனால் தான் வந்து முத்தம் கொடுக்கிறேன் என்று அங்கே கூறிவிட்டு அதை செய்தோமானால் அதைவிட சிறந்த பதிலடி எதுவுமே இருக்க முடியாது எனக்கூறி அதிர வைத்திருக்கிறார்.

அவரின் இந்த தொலைநோக்கு பார்வை கருத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த கேள்விப்பட்ட நெட்டிசன்ஸ் எல்லோரும் உண்மையிலே பாப்ரி கோஸ் மிகவும் தைரியமான பெண்மணி போல…

இப்படி ஒரு வித்தியாசமான பதில் எந்த ஒரு நடிகையிடம் இருந்தும் நாம் எதிர்பார்க்கலையே என கூறி பாராட்டி வருகிறார்கள்.