பிஸ்.. பிஸ்.. படுக்கைக்கு வரியா..? சீனியர் நடிகர் அழைப்பு.. கேரவேனுக்குள் அழைத்து நடிகை செய்த தரமான சம்பவம்..!

பாக்யராஜ் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை பிரகதி. இவர் வீட்ல விசேஷம் என்கிற பாக்யராஜ் இயக்கிய திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார். அதற்கு பிறகு தமிழில் பெரிய மருது, பாண்டியனின் ராஜ்யத்தில், ஜெயம் மாதிரியான நிறைய திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

நிறைய டிவி தொடர்களிலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பொதுவாகவே சினிமாவில் பெண்கள் அதிகமாக எதிர்கொள்ளும் விஷயமாக இந்த அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள்தான் இருந்து வருகின்றன.

படுக்கைக்கு வரியா

தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு பொது ஜனம் மத்தியில் எப்பொழுதுமே நல்லபடியான மதிப்பு இருந்தது கிடையாது. அதற்கு முக்கிய காரணம் சினிமாவிற்கு செல்லும் பெண்கள் ஒழுக்கமாக இருக்க முடியாது என்பதுதான்.

அதற்கு ஏற்றார் போல சினிமாவில் இருக்கும் பெரிய நடிகர்களும் பிரபலங்களும் பெண்களை தவறாக பயன்படுத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த பிரச்சனையை நடிகை பிரகதியும் சந்தித்திருக்கிறார். இது குறித்து அவர் ஒரு பேட்டியில் மிகவும் ஓப்பனாக பேசியும் இருக்கிறார்.

சினிமாவில் ஒரு சில நடிகைகள்தான் இந்த மாதிரி நடக்கும் அட்ஜஸ்ட்மெண்டுகளை வெளியில் கூறுகின்றனர். அப்படி கூறும் நடிகைகளும் பெரும்பாலும் எந்த நடிகர் இப்படி அட்ஜஸ்ட்மெண்ட்டிற்க்கு அழைத்தார் என்பதை கூற மாட்டார்கள்.

சீனியர் நடிகர் அழைப்பு

ஏனெனில் அப்படி கூறுவது அவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காமல் செய்துவிடும் என்கிற காரணத்தினால் மறைமுகமாகதான் கூறுவார்கள். பிரகதியும் அப்படித்தான் கூறியிருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் அவர் கூறும் பொழுது ஒரு படத்தில் நான் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது படப்பிடிப்பு தளத்தில் காலையில் அந்த சம்பவம் நடந்தது.

படத்தில் காமெடி நடிகராக நடித்த சீனியர் நடிகர் ஒருவர் பாலியல் ரீதியாக என்னிடம் தவறாக நடந்து கொண்டார். மேலும் மறைமுகமாக அவர் என்னை படுக்கைக்கு அழைத்தார். அப்படி என்னை அழைத்த அவரை பலபேர் முன்பு நான் அசிங்கப்படுத்தி இருக்க முடியும்.

நடிகை செய்த தரமான சம்பவம்

ஆனால் நான் அப்படி அவரை அசிங்கப்படுத்த விரும்பவில்லை. அதனால் படப்பிடிப்பு முடியும் வரை பொறுமையாக இருந்தேன். பிறகு அவரை என்னுடைய கேரவனுக்கு அவரை அழைத்து என்னுடைய செயல்பாடுகள் எதாவது உங்களிடம் தவறாக தெரிந்ததா? அதனால்தான் என்னை அழைத்தீர்களா என்று கேட்டேன்.

அவர் இல்லை என்று கூறினார். அப்படி என்றால் நீங்கள் என்னிடம் நடந்து கொண்டது மிகவும் தவறான ஒரு விஷயம். இது ஒரு கீழ்த்தரமாக செயல் நீங்கள் என்னிடம் அப்படி கேட்ட இடத்திலேயே உங்களை அசிங்கப்படுத்தி என்னால் அனுப்பி இருக்க முடியும்.

ஆனால் உங்களது இமேஜ் உடைந்து விடக்கூடாது என்பதற்காகதான் பொறுமையாக இருந்து வந்தேன் என்று தனியாக அழைத்து அந்த காமெடி நடிகரை எச்சரித்து அனுப்பினேன். அதற்குப் பிறகு அவர் என் பக்கமே வரவில்லை என்று கூறியிருக்கிறார் நடிகை பிரகதி. இந்த பேட்டி சமூக வலைதளங்களில் அதிகமாக பரவ துவங்கி இருக்கிறது.