ட்ரான்ஸ்பரண்ட் தாவணியில் இதய துடிப்பை எகிற செய்யும் திவ்ய பாரதி!..

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் பல வருடங்களாக நடித்தும் கூட மக்கள் மத்தியிலும் சினிமாவிலும் பெரிதாக பிரபலமாகும் நடிகைகள் உண்டு. ஏனெனில் மக்கள் மத்தியில் ஒரு நடிகை கவனம் பெறுவது என்பதே மிகவும் கடினமான விஷயமாகும்.

ஏனெனில் மொத்த திரைப்படமும் ஒரு கதாநாயகனை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் பொழுது அதில் கதாநாயகியாக வரும் நடிகை மக்கள் மத்தியில் அவர்களை தக்க வைத்துக் கொள்வதற்கு புதிதாக ஏதாவது ஒன்றை செய்ய வேண்டி இருக்கும்.

ட்ரான்ஸ்பரண்ட் தாவணி

சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தாவிட்டால் அவர்களால் தொடர்ந்து பயணிக்க முடியாது என்கிற நிலை இருக்கும். இதனாலேயே நிறைய திரைப்படங்கள் நடித்தும் கூட சில நடிகைகள் தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பை பெற முடியாமல் இருப்பார்கள்.

மக்கள் மத்தியிலும் கவனத்தை பெற முடியாமல் இருப்பார்கள். ஆனால் சில நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் நடித்தே மக்கள் மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்று விடுவார்கள். கிட்டத்தட்ட 10 படங்கள் நடித்து கிடைத்த வரவேற்பு ஒரே திரைப்படத்தில் கிடைத்துவிடும்.

திவ்ய பாரதி

நடிகை கீர்த்தி சுரேஷ் மாதிரியான ஒரு சில நடிகைகள் அப்படியான அதிர்ஷ்டம் பெற்ற நடிகைகளாக இருக்கின்றனர். அந்த வகையில் நடிகை திவ்ய பாரதியும் முக்கியமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார். முதன்முதலாக பேச்சிலர் என்கிற திரைப்படத்தில் தான் கதாநாயகியாக அறிமுகமானார் திவ்யபாரதி.

இந்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார் இத்தனைக்கும் இந்த திரைப்படம் பெரிய ஹிட் கொடுத்ததா என்றால் அப்படி எல்லாம் ஒன்றும் பெரிய வெற்றியை இந்த திரைப்படம் கொடுக்கவில்லை, ஆனால் இந்த திரைப்படத்தில் கதாநாயகி இல்லாமல் படம் நகராது என்கிற அளவிற்கான ஒரு காதல் கதையை கொண்ட திரைப்படம் ஆகும்.

எகிறும் இதயத்துடிப்பு:

பேச்சுலர் படத்தில் பத்து நிமிடம் மட்டும் கதாநாயகி வந்து செல்லும் திரைப்படமாக இல்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படத்தை முதல் திரைப்படமாக தேர்ந்தெடுத்தார் திவ்யபாரதி.

அதனால் பேச்சுலர் திரைப்படம் மூலமாக அதிக பிரபலமானார். தொடர்ந்து இவருக்கு ஜர்னி என்கிற ஒரு வெப் சீரிஸில் நடிப்பதற்கும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பிறகு இரண்டாவதாக தேர்ந்தெடுத்த கதையிலும் மிக கவனமாக மகாராஜா திரைப்படத்தை தேர்ந்தெடுத்தார் திவ்யபாரதி.

அந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக வரும் திவ்யபாரதி மொத்த திரைப்படத்திலேயே சில காட்சிகள் மட்டும்தான் வருவார் என்றாலும் மக்கள் மனதில் நிற்கும் காட்சியாக அவை அமைந்து விட்டன. அதனால் இந்த திரைப்படம் முக்கியமான படமாக அமைந்தது.

தற்சமயம் விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் திவ்யபாரதி. இன்னும் மூன்று நான்கு திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் பாவாடை தாவணியில் எக்கச்சக்க அழகுடன் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகிறது.