வளர்த்த கடா மார்ருல பாய்ச மாதிரி.. தனுஷை தாக்கிய SK.. உஷாராய் ESCAPE..

தமிழ் திரை உலகில் தற்போது முன்னணி நடிகர்களாக விளங்கும் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. சின்னத்திரையில் தொகுப்பாளராக திகழ்ந்த சிவகார்த்திகேயனை வெள்ளி திரைக்கு அழைத்து வந்து வாய்ப்பு கொடுத்து வளர விட்டு அழகு பார்த்தவர் தனுஷ்.

இந்நிலையில் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்று சிவகார்த்திகேயன் படம் என்றால் விரும்பி பார்க்கக் கூடிய அளவு தனக்கு என்று ஒரு ரசிகர் படையை வைத்திருக்கும் சிவக்கார்த்திகேயன் தமிழகத்தில் இருக்கும் அனைவரது வீட்டிலும் செல்ல பிள்ளையாக விளங்குகிறார்.

தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து விவகாரம்..

தற்போது தனது ஐம்பதாவது திரைப்படத்தை தானே இயக்கி ராயன் என்ற பெயரில் ரிலீஸ் செய்து கலவை ரீதியில் ரசிகர்களின் மத்தியில் விமர்சனம் பெற்ற நடிகர் தனுஷ் ரஜினிகாந்தின் மூத்த மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் பிறந்து வளர்ந்த நிலையில் இருவர் இடையே மனகசப்பு ஏற்பட்டு தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் பேசியிருக்கும் பேச்சானது இணையத்தில் வைரலாகி உள்ளது.

மேலும் தனுஷ் தற்போது ராயன் படத்தை அடுத்து இளையராஜாவின் பயோ பிக், மாரி செல்வராஜின் இயக்கத்தில் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம், அடுத்ததாக குபேரா போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் 2004 ஆம் ஆண்டு ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டு தற்போது மனக்கசப்பின் காரணத்தால் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். எனினும் இதுவரை இரண்டு பேரும் சட்டபூர்வமாக விவாகரத்து பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளது.

வளர்த்த கடா மார்ருல பாய்ச மாதிரி..

இந்நிலையில் அவர்கள் குடும்பத்தார் இவரை சேர்த்து வைக்க முடியுமா? என்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற இந்த சூழ்நிலையில் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே இருந்த நட்பு உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

திரை உலகில் சிவகார்த்திகேயனை வளர்த்து விட்டதே தனுஷ் என்று சொல்லலாம். ஆனால் அந்த நட்பானது சில ஆண்டுகளாக பிரச்சனையில் ஓடிக்கொண்டு இருப்பதாக தகவல்கள் பரவலாக வெளிவந்து உள்ளது. இதனை அடுத்து வளர்த்த கடா மார்ருல பாய்ந்து விட்டதா என்பது போன்ற வசனங்களை ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

இதற்குக் காரணம் கொட்டு காளி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசிய பேச்சானது இணையங்களில் கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசிய பேச்சு தனுசை தாங்கி தான் என்று ரசிகர்கள் பேச ஆரம்பித்தார்கள்.

இதனை அடுத்து பழைய வீடியோக்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அந்த வகையில் 3 திரைப்படத்தின் பிரமோஷனுக்காக தனுஷ் ஐஸ்வர்யா தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று கலந்து கொண்டார்கள். அந்த நிகழ்ச்சியை சிவகார்த்திகேயன் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

SK உஷாராய் ESCAPE..

அந்த நிகழ்ச்சிகள் தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு தமிழ் தெரியாது என்று சொல்ல ஐஸ்வர்யாவோ எனது தமிழுக்கு என்ன குறைச்சல் என்று கேட்டார். இதைக் கேட்டவுடன் சிவகார்த்திகேயன் சிரித்து சமாளித்துக் கொண்டிருக்கும் போதே தனுஷ் நான் அவரை தேடி போகல அவர் தான் என்னை தேடி வந்தார் என்று கூறி இருக்கிறார்.

இதனைக் கேட்ட சிவகார்த்திகேயனை பார்த்து இதுக்கு நீங்க இப்ப என்ன கவுண்டர் கொடுக்க போறீங்க என்று கேட்டுவிட்டு இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு டப்பிங் என்னுடன் தான் வர வேண்டும் என்று சொன்னார்.

உடனே சிவகார்த்திகேயன் அவங்க குடும்பப் பிரச்சனை நமக்கு எதுக்கு என்று ரசிகர்களை பார்த்து பேசி சமாளித்து விட்டார். இந்த வீடியோவை தற்போது நெட்டிசன்கள் அதிகளவு பகிர்ந்து எஸ் கே எஸ்கேப்பான விஷயத்தைப் பற்றி ஜாலியாக பேசி வருகிறார்கள்.