மாமா நீங்க எப்போ வந்தீங்க…? அக்கா கணவரை பார்த்ததும் Surprise ஆன கீர்த்தி சுரேஷ்!

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

இவர் தெலுங்கில் நடித்த மகாநடி திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

நடிகை கீர்த்தி சுரேஷ்:

மலையாள மொழியில் குழந்தை நட்சத்திரமாக சில திரைப்படங்களில் நடித்து வந்த அவருக்கு அதன் பிறகு பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியதை அடுத்து பின்னர் தமிழில் விக்ரம் பிரபு இயக்கத்தில் வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார்.

முதல் படத்தில் ஒரு அளவுக்கு பெயரும் புகழும் பெற்ற கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களில் மூலமாக தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டார்.

எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றவாறு தன்னுடைய உடல் பாவனை முதல் கொண்டு நடிப்பு வரை எல்லாமே அப்படியே மாற்றிக் கொண்டு தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி நடித்து எல்லோரையும் வியக்க வைப்பார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

கடைசியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ரகு தாத்தா இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

பாலிவுட்டில் அறிமுகம்:

அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் பாலிிவுட்டில் அறிமுகமாக உள்ளார் கீர்த்தி சுரேஷ். இது தெறி படத்தின் ரீமிக்காக பேபி ஜான் என்ற பெயரில் உருவாகி வருகிறது.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் தெறி பட சமந்தா கேரக்டரில் ஏற்று நடித்திருக்கிறார். தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

சமீப நாட்களாக தொடர்ச்சியாக பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். இவர் மிகச்சிறந்த நடிகை என்பதால் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருக்கிறது.

ரகு தாத்தா படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ரிவால்வர் ரீட்டா என்ற படம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் சமீபத்திய தனியார் YouTube சேனல் ஒன்றுக்கு ரசிகர்கள் சந்திப்பு நேர்காணல் ஒன்று நடத்தப்பட்டது . அதில் கீர்த்தி சுரேஷை பிரபல நடன கலைஞரான கலா மாஸ்டர் தான் பேட்டி எடுத்திருந்தார்.

அந்த பேட்டியில் கீர்த்தி சுரேஷின் சினிமா பயணம் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பல விஷயங்கள். பேசப்பட்டது.

மாமா எப்போ வந்தீங்க?

அப்போது கீர்த்திக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அவரது அக்காவின் கணவர் மற்றும் அவரது செல்ல நாய்க்குட்டி அழைத்து வந்தனர் .

கீர்த்தி சுரேஷ் தன்னுடைய அக்காவின் கணவரை பார்த்தவுடனே செம சர்ப்ரைஸ் ஆகி… மாமா நீங்க எப்ப வந்தீங்க? என சர்ப்ரைஸ் உடன் கேட்க ஆரம்பித்தார்.

வெளிநாட்டில் இருக்கும் அவர் இன்று தான் பிளைட்டில் பிளைட்டில் வந்து இறங்கி நேராக இங்கு வந்தேன் என கூறுகிறார் .

உடனே கீர்த்தி சுரேஷ் நான் சாயங்காலம் தான் அவருக்கு மெசேஜ் செய்தேன்.. அதுக்குள்ள இங்க வந்து நிற்கிறது எனக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸா இருக்கு ஒரே நேரத்தில் இரண்டு சர்ப்ரைஸ் என மகிழ்ச்சியில் உச்சத்திற்கே சென்று விட்டார்.