குடிபோதையில் இளம் நடிகருடன்… குஷ்பூ கதையை சொல்லவா..? நானே நேர்ல பாத்தேன்.. விளாசும் பிரபலம்..!

தமிழில் 1989 இல் வெளியான வருஷம் 16 திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் நடிகை குஷ்பூ. நடிகை குஷ்பூவை பொருத்தவரை அவர்கள் சினிமாவிற்கு வந்த உடனே பெரும் வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணம் குஷ்பூ சிறுவயதிலேயே மிக அழகான ஒரு பெண்ணாக இருந்தார்.

இத்தனைக்கும் அவருக்கு தமிழ் சினிமாவில் அறிமுகமானபோது தமிழே சுத்தமாக தெரியாது. இருந்தாலும் கூட தமிழர்கள் அவரை ஒரு பெரும் நடிகையாக ஏற்றுக் கொண்டனர். சின்னதம்பி திரைப்படத்திற்கு பிறகு குஷ்புவின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமாக அதிகரித்தது.

குஷ்பூ கதையை சொல்லவா

மேலும் குஷ்பூ தமிழ் சினிமாவில் எந்த ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தாலும் அதை ஒப்புக்கொண்டு நடிப்பவராக இருந்தார் இளமையான நடிகை என்பதால் அம்மா சதாபாத்திரத்தில் நடிக்க முடியாது என்றெல்லாம் கூறாமல் படத்திற்கு அந்த கதாபாத்திரம் தேவை என்றால் தயங்காமல் நடித்தார் குஷ்பூ.

உதாரணத்திற்கு அண்ணாமலை திரைப்படத்தில் முதல் பாதியில் புஷ்பூ மாடர்ன் லுக்கில் இளம் பெண்ணாக இருப்பார். ஆனால் இரண்டாம் பாதியில் தோற்றத்தில் ஒரு பெண்ணுக்கு அம்மாவாக நடித்திருப்பார். இப்படி எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை சிறப்பாக நடிக்கக் கூடியவராக குஷ்பு இருந்தார்.

குடிபோதையில் இளம் நடிகருடன்

இந்த நிலையில் முறை மாமன் படத்தில் குஷ்பு நடிக்கும் பொழுது குஷ்பூவுக்கும் இயக்குனர் சுந்தர் சிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அப்போதெல்லாம் இயக்குனரை திருமணம் செய்து கொள்வது என்பது நடிகைகளுக்கு சினிமாவில் வலம் வருவதற்கு பாதுகாப்பான விஷயமாக இருந்தது என்று கூறப்படுகிறது.

இதனால்தான் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டிருந்தார் மற்ற நடிகைகள் போல சீக்கிரம் விவாகரத்து செய்து கொள்ளாமல் இப்பொழுது வரை காதல் ஜோடிகளாகவே இவர்கள் இருந்து வருகின்றனர். குஷ்பு பிரபலமாக இருந்த காலகட்டத்தில் அவரை குறித்து நிறைய சர்ச்சைகளும் கிசுகிசுக்களும் இருந்து வந்தன.

விளாசும் பிரபலம்

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் நடிகை குஷ்பு குறித்து அதிர்ச்சியூட்டும் சில தகவல்களை கூறியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்புக்காக ஒரு தங்கும் விடுதிக்கு நாங்கள் சென்றிருந்தோம்.

அந்த சமயத்தில் குஷ்பூ அதிக பிரபலமாக இருந்தார். நான் உட்பட 4 பத்திரிகையாளர்கள் அந்த ஹோட்டலுக்கு சென்றிருந்தோம். அப்பொழுது குஷ்பூ அதிக அளவில் மது அருந்துவிட்டு நடக்கவே முடியாமல் நடந்து வந்தார். அவரை தாங்கிக்கொண்டு பிரபல நடிகர் அப்பாஸ் அவருடன் வந்தார். பிறகு இருவரும் காலில் ஏறி சென்றனர் இதனை என் கண்ணால் பார்த்தேன் என்று கூறியிருக்கிறார் பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன்.