பிரபல நடிகை ரோஜா கைது..? இத்தனை கோடியா..? கேட்டாலே கிறுகிறுன்னு வருதே..!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகையாக இருந்து வந்தவர் நடிகை ரோஜா. தமிழில் உள்ள பல முக்கிய நடிகர்களுடன் சேர்ந்து நடித்து விட்டார் ரோஜா சினிமாவிற்கு அறிமுகமான உடனே ரோஜாவிற்கு வாய்ப்புகள் என்பது அதிகமாகதான் இருந்து வந்தது.

முதன்முதலாக செம்பருத்தி திரைப்படம் மூலமாக அறிமுகமானார் ரோஜா இந்த நிலையில் ராஜா தற்சமயம் ஒரு ஊழல் தொடர்பான வழக்கில் மாட்டிக் கொண்டிருப்பது அதிக சர்ச்சையாகி வருகின்றன.

சினிமாவில் தொடர்ந்து பிரபலமான நடிகையாக இருந்து வந்தார் ரோஜா அதற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகளை இழக்க தொடங்கினார் இவர் தனது முதல் திரைப்படத்தை இயக்கிய ஆர்.கே செல்வமணியைதான் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பிரபல நடிகை ரோஜா

அதற்கு பிறகு ஆர்.கே செல்வமணி நிறைய திரைப்படங்களை இயக்கி வந்தார். இதற்கு நடுவே திரைத்துறையில் நிறைய பதவிகளிலும் இருந்து வந்தார் ஆர்.கே செல்வமணி. இந்த நிலையில் சினிமாவில் வரவேற்பு குறைய தொடங்கிய பிறகு அரசியலில் ஈடுபாடு காட்ட துவங்கினார் ரோஜா.

தற்சமயம் ஆந்திராவில் பெரும் அரசியல் புள்ளியாக ரோஜா இருந்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சிதான் ஆந்திராவில் நடந்தது. அப்பொழுது அந்தக் கட்சியின் நகரி தொகுதி எம்எல்ஏவாக நடிகை ரோஜா இருந்து வந்தார்.

இத்தனை கோடியா

இரண்டு வருடங்களுக்கு மேலாக அமைச்சர் பதவியிலும் இருந்து வருகிறார் சுற்றுலா மற்றும் விளையாட்டு துறையின் அமைச்சராக இவர் இருந்து வருகிறார். இந்த நிலையில் ஆந்திராவில் முதல்வர் கோப்பை விளையாட்டு என்கிற போட்டியை தொடங்கி வைத்தார்.

இது ஒரு மாநில அளவிலான விளையாட்டு போட்டியாக அமைந்தது இதற்காக ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி 150 கோடி நிதியை ஒதுக்கியது. ஆனால் இந்த திட்டத்தில் நிறைய முறைகேடு நடந்திருப்பதாக தற்சமயம் புகார்கள் வர துவங்கி இருக்கின்றன.

கேட்டாலே கிறுகிறுன்னு வருதே

தேசிய கபடி வீரரும் ஆத்யா – பாட்சா சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியமான ஆர்.டி பிரசாத் இது குறித்த புகாரை அளித்திருக்கிறார். இந்த புகாரின் படி முன்னாள் அமைச்சர்கள் ஆர்.கே. ரோஜா, கிருஷ்ணதாஸ் ஆகியோர்கள் மீது ஊழல் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இது வெகு நாட்களாகவே பேச்சில் இருந்து வந்த நிலையில் அடுத்து சிபிஐ விசாரணைக்கு செல்ல இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. இதனால் நடிகை ரோஜா விரைவிலேயே கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்சமயம் ஆந்திராவில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இது மாறி இருக்கிறது.