நட்ட நடு இரவில் ஆணுறை வாங்கி வர சொல்லி.. நடிகர் நகுல் செய்த டார்ச்சர்.. புலம்பும் இயக்குனர்..!

தமிழ் சினிமாவில் பிரபல இளம் நடிகராக வலம் வந்துக்கொண்டிருப்பவர் தான் நடிகர் நகுல். 2000 காலகட்டத்தில் தனது திரை பயணத்தை தொடங்கினார் நடிகர் நகுல்.

முதன் முதலில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தில் முன்னணி கதாநாயகியாக நடித்து அறிமுகமானார்.

நடிகர் நகுல்:

இந்த திரைப்படத்தில் அவரது நடிப்பை தாண்டி பாடலையும் பாடியிருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஜெய்தேவ் மற்றும் லக்ஷ்மி லட்சுமி தம்பதியருக்கு மகனாக பிறந்த நடிகர் நகுல் தேவயானி தம்பி என்பது குறிப்பிடத்தக்கது .

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகையாக ஜொலித்துக் கொண்டிருந்த நடிகை தேவயானி பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் பிரபல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த முன்னணி நடிகையாக இடத்தை பிடித்து வைத்திருந்தார்.

அவரது தம்பி தான் நகுல் அக்காவின் வழியில் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் நகுல் முதல் படமே ஷங்கரின் இயக்கத்தில் நடித்ததால் எல்லோரது கவனத்தையும் ஈர்த்து நடிகராக பார்க்கப்பட்டார்.

பாய்ஸ் படத்தை தொடர்ந்து காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்தகோட்டை, நான் ராஜாவாகப் போகிறேன்,  வல்லினம் , தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், வாஸ்கோடகாமா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிகர் நகுல் நடித்திருக்கிறார் .

இவர் நடிகர் எனபதை தாண்டி தொலைக்காட்சி நடுவராகவும் பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகையை அட்ஜெஸ்ட்மெண்டிற்கு அழைத்த நகுல்:

தனது நீண்ட நாள் பள்ளி தோழியான சுருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

கடைசியாக நடிகர் நகுல் வெளிவந்த திரைப்படம் தான் வாஸ்கோடாகாமா. இந்த திரைப்படத்தின் நடிகையை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்ததாக வாஸ்கோடகாமா படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய ஏ எம் சந்துரு கூறியிருந்தார்.

மேலும் இவர் நடிகர் நகுல் குறித்து மிக மோசமான கருத்துக்களை கூறி அதிர வைத்திருக்கிறார்.

அவர் கூறியதாவது நான் வாஸ்கோடகாமா படத்தில் அசோசியேட் இயக்குனராக இரண்டு வருடம் வேலை செய்து வந்தேன்.

ஆனால் கடைசி பத்து நாட்கள் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு என்னை கூப்பிட்டவை இல்லை. என்னை வேலை செய்யவும் விடவில்லை.

அதே போல இசை வெளியீட்டு விழாவிலும் என்னை வரவிடாமல் செய்தார். படம் ரிலீசான பிறகு அந்த படத்திலேயும் என்னுடைய பெயர் வரவே இல்லை.

இதற்கெல்லாம் காரணம் நகுல் என முழு குற்றச்சாட்டையும் அவர் மீது திணித்திருக்கிறார் உதவி இயக்குனர்.

மேலும் படப்பிடிப்பு தளத்தில் நகுல் என்னை அழைத்து காண்டம் வாங்கிவரச் சொன்னார் அப்போது நான் இதைக் கேட்டதும் மிகுந்த அதிர்ச்சி அடைந்து விட்டேன் .

வேலை இருக்கு முடியாது என்று கூறினேன். பின்னர் மீண்டும் காலை 3 மணி அளவில் வந்து மூன்று காண்டம் வேண்டும் ரொம்ப அர்ஜென்ட் வாங்கிட்டு வா என்று கூறி என்னை டார்ச்சர் செய்தார்.

அப்போதும் நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். இதுவே எங்கள் இருவருக்குள்ளும் இடையே பெரிய பிரச்சனையாக உருவாகியது பின்னர் எல்லாம் சரியாகிவிடும் என்று நான் நினைத்தேன்.

ஆனால், மனதில் இதை மனதில் வைத்துக்கொண்டு வாஸ்கோடாகாமா படத்தின் இயக்குனரிடம் அசோசியேட் சந்துரு எனக்கு கதை சொல்லி கதை சொல்லி டார்ச்சர் செய்கிறார்.

ரொம்ப அர்ஜென்ட் 3 கண்டம் வாங்கிடுவா…..

அவர் எனக்கு ரொம்பவே தொல்லை கொடுக்கிறார். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தால் நான் வரவே மாட்டேன் என்று சொல்ல இயக்குனர் கடைசி பத்து நாட்களுக்கு என்னை கூப்பிடவில்லை .

இசை வெளியீட்டு விழாவிலும் நான் வர முயற்சித்தேன். ஆனால் என்னை வரவிடாமல் தடுத்து விட்டார். படம் ரிலீஸ் ஆன பிறகும் கூட படத்தில் என்னுடைய பெயரை வரவில்லை.

இதனால் என்னுடைய இரண்டு வருட உழைப்பு வீணாகி போய்விட்டது என அந்த பேட்டியில் உதவி இயக்குனர் மிகுந்த வருத்தத்தோடு கூறினார்.

இந்த கேள்விப்பட்ட ரசிகர்கள் நடிகர் நகுல் இவ்வளவு மோசமானவரா? இப்படி ஒரு குணத்தை வைத்துக்கொண்டு எப்படி நல்லவர் போல் நடித்துக் கொண்டு நம்மை ஏமாற்றுகிறார் என அதிர்ச்சியாகி அவரைத் திட்டி தீர்த்து வருகிறார்கள்.