கூட்டத்தின் நடுவே.. ரசிகரின் செயல்.. அதிர்ச்சியில் உறைந்து போன இளம் நடிகை அஞ்சு குரியன்..!

பிரபல மலையாள நடிகையான அஞ்சுக்குரியன் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துப்பி தொடர்ச்சியாக பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள திரைப்படமான கவி உதேசிச்சத்து என்ற திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார் .

நடிகை அஞ்சு குரியன்:

அதை எடுத்து 2018 ஆம் ஆண்டில் வெளி வந்த நான் பிரகாசம் என்ற திரைப்படத்தில் நடித்த தன் மூலமாக மிகப் பெரிய அளவில் பிரபலமானார் அஞ்சு குரியன் .

இந்த திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியும் புகழையும் தேடித்தந்தது இதனிடையே அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நேரம் என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து மலையாளத்தில் தனது வாழ்க்கையை தொடங்கினார் .

அடுத்தடுத்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

நேரம் படம் வெளியான அடுத்த வருடம் ஓம் சாந்தி ஓசானா என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து மேலும் பிரபலமானார் .

முன்னதாக இவர் குடும்ப படங்களிலும் இசை ஆல்பங்களிலும் நடித்து நடிப்பு பயணத்தை தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019 ஆம் ஆண்டு அர்ஜுன் கோகுல் இயக்கத்தில் வெளிவந்த சிபு என்ற திரைப்பட. த்தில் கதாநாயகியாக நடித்தார்.

தற்போது 31 வயதாகும் அஞ்சு குரியன் பார்ப்பதற்கு நல்ல அழகான தோற்றத்துடன் வசீகர பார்வையால் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

நேரம் படம் கொடுத்த பிரபலம்:

நிவின் பாலின் நடிப்பில் வெளிவந்த நேரம் மாபெரும் வெற்றி பெற்றதால் அஞ்சு குரியனுக்கு அதுவே மிகப்பெரிய அடையாளமாக பார்க்கப்பட்டது.

இவர் மலையாள சினிமாவின் ஸ்டார் நடிகையாக தற்போது திகழ்ந்த வருகிறார். அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக மக்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

இவர் தமிழில் நேரம் திரைப்படத்தின் மூலமாக நடித்து அறிமுகமானதை தொடர்ந்து சென்னை டு சிங்கப்பூர் சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக தமிழில் மிர்ச்சி சிவாவின் இயக்கத்தில் நடிப்பில் வெளிவந்த சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரன் என்ற திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

இதனுடைய தனது சமூக வலைத்தளங்களில் எப்போதும் கிளாமரான போட்டோக்களையும் அழகழகான கவர்ச்சி புகைப்படங்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் அஞ்சு குரியன் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

அதாவது கேரள பாலக்காடு பகுதியில் உள்ள ஒரு கடைத்திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அதிர்ச்சி அடைந்த அஞ்சு குரியன்:

அப்போது அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேலும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் அஞ்சு குரியன்.

அப்படி ஒருவர் ரசிகர் வந்து புகைப்படம் எடுக்கும் போது அஞ்சு குரியனின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.

உடனே அதிர்ச்சி அடைந்துபோன அஞ்சு குரியன் அவரை தூக்கி விட்டு எழுந்து நின்று பின்னர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

உடனே அந்த ரசிகன் அஞ்சுக்குரிய என்னை பார்த்து சந்தோஷத்தில் கலங்கி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார் .

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. கூட்டத்தின் நடுவே ரசிகரின் அளவு கடந்த அன்பை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார் அஞ்சு குரியன் இந்த வீடியோ சமூக வலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.