கட்டழகன் மோகன்லாலின் பாய்ச்சல்.. மலையாள நடிகைகள் கூச்சல்.. அதிர்ந்து போன ரசிகர்கள்.. திடுக்கிடும் தகவல்கள்…!

ஹேமா அறிக்கை என்கிற ஒரு விஷயம்தான் தற்சமயம் மலையாள சினிமாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. மலையாள சினிமாவில் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதுமே தற்சமயம் பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இது இருக்கிறது.

எல்லா துறைகளிலுமே பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நிறுவனங்களில் ஏதோ ஒரு இடத்தில் கேட்பதற்காவது அங்கு உரிமைகள் பெண்களுக்கு இருக்கின்றன. ஆனால் சினிமாவைப் பொறுத்தவரை அவர்களுக்கு அப்படியான உரிமைகள் கூட இருப்பதில்லை.

மலையாள நடிகைகள் கூச்சல்

பெண்கள் இந்த விஷயங்களை வெளியில் கூறினாலே அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காது என்கிற நிலை சினிமாவில் இருக்கிறது. இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு பிரபல மலையாள நடிகை ஒருவரை காரில் கடத்தி சென்று பலாத்காரம் செய்த நிகழ்வு அதிக பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து கேரள அரசு மலையாள சினிமாவில் உள்ள பாலியல் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்யும்படி ஓய்வு பெற்ற நீதிபதியான ஹேமா என்பவரின் தலைமையில் ஹேமா கமிட்டி என்கிற அமைப்பை நிறுவியது. அந்த அமைப்பு தயார் செய்த அறிக்கைதான் தற்சமயம் அதிக சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

அதிர்ந்து போன ரசிகர்கள்

அந்த அறிக்கையின்படி மலையாள சினிமாவில் பலராலும் போற்றப்படும் பல முக்கிய பிரபலங்கள் இந்த பாலியல் விஷயங்களில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனை அடுத்து அவர்களுக்கு என்ன மாதிரியான தண்டனைகள் இருக்கும் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. அதில் பெண்கள் கொடுத்த வாக்குமூலங்கள் பலவும் அதிர்ச்சியை தருவதாக இருக்கிறது.

அதில் ஒரு நடிகை கூறும்பொழுது ஒரு பிரபல நடிகர் என்னை அட்ஜஸ்ட்மெண்ட்க்கு அழைத்தார். ஆனால் நான் வருவதற்கு மறுத்து விட்டேன். இதனால் என்னுடன் கட்டிப்பிடிக்கும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது.

மோகன்லாலின் பாய்ச்சல்

அப்பொழுது வேண்டுமென்றே அதை அதிக டேக் எடுத்தது மட்டுமின்றி அந்த காட்சிகளின் போது என்னை தவறான இடங்களில் அவர் தொட்டார் என்று அந்த நடிகை கூறி இருக்கிறார். அதேபோல மற்றும் ஒரு நடிகை கூறும்பொழுது இயற்கை உபாதைக்காக ஒரு காட்டு பக்கம் ஒதுங்கிய பொழுது அங்கு ஒரு நடிகர் ஒளிந்து இருந்து பார்த்தார் என்று கூறியிருக்கிறார்.

இப்படி எல்லாம் நிகழ்வுகள் நடந்து இருப்பதால் தற்சமயம் இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இதில் மலையாளத்தில் உள்ள ஐந்து முக்கிய நடிகர்களின் பெயர்கள் அடிபட்டு இருப்பதாக கூறப்படுகிறது இதுகுறித்து ரசிகர்கள் கூறும் பொழுது நடிகர் மோகன்லால் பெண்கள் விஷயத்தில் ஏற்கனவே மலையாளத்தில் நிறைய சர்ச்சைகளுக்கு உள்ளானவர்.

எனவே அவரது பெயரும் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறி வருகின்றனர். ஆனால் ஹேமா கமிட்டி இன்னும் அதை குறித்து எந்த ஒரு தகவலும் வெளியிடவில்லை இருந்தாலும் நடிகர் சங்க தலைவர் பொறுப்பிலிருந்து மோகன்லால் தற்சமயம் ராஜினாமா செய்து இருப்பது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.