சிவகார்த்திகேயன் இப்படி செஞ்சது ரொம்ப தப்பு..! பிரபலம் வெளியிட்ட தகவல்..! ரசிகர்கள் ஷாக்..!

சின்னத்திரையில் இருந்து வரவேற்பு பெற்று அதன் மூலமாக தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொட்டவர் நடிகர் சிவகார்த்திகேயன். பெரும்பாலும் சினிமாவிற்கு நடிக்க வருபவர்கள் நல்ல பணக்கார குடும்பத்தையோ அல்லது நடுத்தர குடும்பத்தையோ சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

பெரும்பாலும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் சினிமாவிற்கு வருவதற்கான கனவுகளை கூட காண்பது கிடையாது. அப்படி இருக்கும் பொழுது தன்னுடைய தந்தை இறந்த பிறகும் கூட சினிமாவில் மீது ஆசை கொண்டு வந்து சினிமாவிற்கு வந்து அதை சாதித்தும் காட்டியவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன்

இப்பொழுது சினிமாவில் வாய்ப்பு தேடி வரும் பல இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். சாதாரண தொகுப்பாளராக விஜய் டிவியில் இருந்த சிவகார்த்திகேயன் தன்னுடைய தனிப்பட்ட திறமை மூலமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

பிறகு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதில் அவர் கலகலப்பாக பேசியது பிரபலங்கள் பலருக்கும் பிடித்து போகவே சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. இந்த நிலையில் முதன்முதலாக இயக்குனர் எழில் இயக்கிய மனம் கொத்தி பறவை திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் சிவகார்த்திகேயன்.

செஞ்சது ரொம்ப தப்பு

அதனை தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை வைத்துக்கொண்டு படம் எடுக்க தயாரிப்பாளர்கள் கிடைக்காமல் இருக்கும் இயக்குனர்களுக்கு படம் தயாரிக்க உதவி வருகிறார் சிவகார்த்திகேயன்.

ஏற்கனவே யூடியூப்பர்கள் இணைந்து இயக்கிய நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு என்கிற திரைப்படத்தை சிவகார்த்திகேயன்தான் தயாரித்தார். இப்படி வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் பல இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

ரசிகர்கள் ஷாக்

சமீபத்தில் வெளியான கொட்டுக்காளி திரைப்படம் இவரது தயாரிப்பில் வெளியான திரைப்படம்தான். ஆனால் இந்த திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட்டிருக்க கூடாது என்று இதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார் இயக்குனர் அமீர்.

இது குறித்து கூறும் பொழுது கொட்டுகாளி திரைப்படம் திரையரங்கில் வெளியாவதற்கான படம் கிடையாது. அது விருது வாங்குவதற்காக எடுக்கப்பட்ட படம். அவ்வளவு பெரிய விருது வாங்கும் இயக்குனரின் திரைப்படத்தை திரையரங்கில் வெளியிடும் பொழுது அதை பார்க்கும் ரசிகர்கள் வெட்டுவேன் குத்துவேன் என்றெல்லாம் வெளியில் பேசுவதை கேட்க முடிகிறது.

அது மிகவும் சங்கடமாக இருக்கிறது. எனவே பெரும் இயக்குனர்களுக்கு அப்படியான நிலையை உருவாக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.