இயக்குனரையே Chair தூக்கி அடிச்சாரு..! ரகுவரன், முரளி இரு சிகரங்கள் மறைய உண்மை காரணம்..!

கோலிவுட் சினிமாவில் தனக்கான தனி சாம்ராஜ்யத்தை வைத்துக்கொண்டு பிரபலமான ஹீரோவாக ஒரு காலத்தக்கட்டத்தில் வலம் வந்து கொண்டிருந்த ஹீரோக்கள் இந்த உலகை விட்டு மறைந்த பிறகும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் தொடர்ந்து இருக்கத்தான் செய்கிறது.

இப்போதும் அவர்களது ரசிகர்கள் அவர்களின் படங்களை ரசித்து கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த லிஸ்டில் இருப்பவர்கள் தான் நடிகர் முரளி மற்றும் நடிகர் ரகுவரன்.

நடிகர் ரகுவரன்:

இவர்களின் திரை வாழ்க்கை குறித்தும் அவர்கள் மறைவு குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார்.

ரகுவானனின் பெயரைக் கேட்டதும். எனக்கு ஞாபகத்திற்கு வருவது ஒரு விஷயம் தான். தன்னுடைய குரலாலே மிரட்டும் மிகச் சிறந்த நடிகர் ரகுவரன்.

அவருடைய தோற்றத்துக்கும் குரலுக்கும் சம்பந்தமே இருக்காது. நடிகராக தமிழ் சினிமாவில் தனக்கான தனி சாம்ராஜத்தை பிடித்தார்.

திரைப்படத்தில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் அப்பா கேரக்டர்களிலும் இப்படி அனைத்து விதமான கேரக்டர் கொடுத்தாலும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்கள் தமிழ் சினிமாவில் மிகக் குறைவு.

அது ரகுவரனுக்கு மிகவும் சுலபமாக அமைந்தது. அதேபோல் நடிகர் முரளி என எடுத்துக்கொண்டால் அவர் கன்னடத்தில் பிறந்தவர். ஆனால் அவ்வளவு அழகாக நல்ல உச்சரிப்புடன் தமிழ் பேசக்கூடிய சிறந்த நடிகர்.

ரகுவரனால் எல்லோருக்கும் பிரச்சனை:

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த வில்லன் நடிகராக கலந்து கலக்கி கொண்டு வந்த சமயத்தில் ரகுவரன் எதிர்கொண்ட பிரச்சனைகள் என ஏதேனும் இருக்கிறதா என கேள்வி எழுப்பியதற்கு மற்றவர்களால் ரகுவரனுக்கு பிரச்சனை ஏற்படவில்லை.

ஆனால் ரகுவரனால் தான் மற்றவருக்கு சூட்டிங் ஸ்பாட்டிலே தொல்லை ஏற்பட்டுள்ளது. அவர் சூட்டிங் ஸ்பாட்டிற்கு நேரத்திற்கு வரமாட்டார்.

தண்ணி அடிச்சிட்டு சூட்டிங் ஸ்பாட்டில் படுத்துட்டு ரகளை பண்ணுவாரு. ஏதேனும் இயக்குனர்கள் காட்சி கொடுத்தால் இதெல்லாம் ஒரு சீனா அப்படின்னு இயக்குனரை வாடா போடா என்று திட்டுவார் .

ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர்… சக நடிகர்களுடன் சண்டைபோட்டு சேரை தூக்கி அடிச்சியிருக்காரு நடிகர் ரகுவரன்.

தன்னுடைய திரைப்படத்தில் நடிக்கும் எந்த ஒரு ஹீரோக்கும் மரியாதை கொடுத்ததே கிடையாது. வில்லனாக நடித்த ரகுவரன் ஹீரோக்களை வாடா போடா என்று தான் எல்லோரையும் சூட்டிங் ஸ்பாட்டில் அழைப்பார்.

அந்த அளவுக்கு திமிர் பிடித்த நடிகராக அவர் பார்க்கப்பட்டு வந்தார். ரகுவரன் சினிமா வாழ்க்கை சீர் எடுத்துக் கொண்டதுக்கு ஒரே ஒரு காரணம் குடிபோதை தான் .

24 மணி நேரம் குடித்துக்கொண்டே இருப்பார். குடித்தால் தான் என்னால் நடிக்கவே முடியும் என்ற ஒரு கட்டாயத்தில் பலவீனமான பழக்கத்தை வைத்துக் கொண்டிருந்தவர் ரகுவரன்.

ரகுவரனை பொறுத்தவரை தூங்கும் நேரத்தை தவிர்த்து மத்த எல்லா நேரத்திலும் குடி போதையில் தான் இருப்பார் .

கமல் ஹாசனுடன் நடிக்க மறுத்த ரகுவரன்:

படப்பிடிப்புக்கு வந்தால் அவர் பாட்டுக்கு அவர் வேலையை செய்வார். இயக்குனர் பேச்சை மதிக்கவே மாட்டார். இதனால் ஒரு சில இயக்குனர்கள் மட்டும்தான் அவரோடு சேர்ந்து பயணிக்க முடிந்தது.

சில இயக்குனர்கள் நாம் சொல்வது ஒன்று அவர் செய்யறது ஒன்னு அவர் கூட எல்லாம் நம்மளால படம் எடுக்க முடியாது என்று நினைத்தே அவருக்கு பட வாய்ப்புகள் கொடுக்காமல் போய்விட்டார்கள் .

இதனால் தான் அவரது மார்க்கெட் சரிந்தது. எனவே முழுக்க முழுக்க குடிபோதையில் தான் அவரது வாழ்க்கை அழிந்து போனது.

கமல்ஹாசன் ரகுவரன் இதுவரை சேர்ந்து நடித்தது இல்லை. அதற்கான சந்தர்ப்பமும் அமைந்ததில்லை. அதற்கு தனிப்பட்ட காரணம் ஏதேனும் இருக்கிறதா? என கேட்டதுக்கு…..

கமல்ஹாசனை பொறுத்தவரை தன்னுடைய காட்சிகளில் தன்னைவிட யாரும் பெரிதாக நடித்து பர்பாமென்ஸ் செய்து விடக்கூடாது என நினைப்பவர்.

இதனால் ரகுவரன் கமல்ஹாசன் இடையே பெரிய போட்டி நிலவியது. அதனால அவர்கள் இருவருக்கும் ஒத்துவரவில்லை .

ஆனால், ரஜினி அப்படி இல்லை யார் எவ்வளவு அடிச்சாலும் அதை ஒரு விஷயமாக எடுத்துக் கொள்ள மாட்டார் . அவர்களின் நடிப்பை பாராட்டும் நல்ல மனம் கொண்டவர் நடிகர் ரஜினிகாந்த்.

அதனால் ரகுவரன் ரஜினியுடன் பல திரைப்படங்களில் நடித்திருப்பார். கமல்ஹாசன் உடன் நடிக்காததற்கு காரணம் அதுதான்.

அதே போல் நடிகர் முரளி எப்போது தன்னுடைய வாழ்க்கை குடிபோதையால் கெடுத்துக் கொண்டார், அதேபோல கிட்டத்தட்ட அவரது மகன் அதர்வாவும் அதே வழியில் நடக்க ஆரம்பித்து விட்டார் .

ஆம், போதைக்கு அடிமையாகி பட வாய்ப்புகள் கெடுத்துக் கொண்டார். அவ்வளவு பெரிய நடிகராக சினிமாவில் தன்னுடைய அப்பா இருந்த சமயத்தில் அதர்வா அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை.

தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்ற பழமொழிக்கு ஏற்ப முரளி பதினாறு அடி பாய்ந்தார். ஆனால் அதர்வா 8 அடி கூட பாயாமல் அங்கே நின்று விட்டார்.

பெண்கள் விஷயத்தில் முரளி இப்படிதான்:

நடிகர் முரளி மகன் அதர்வா ஒரு விஷயத்தில் ரொம்ப வீக் . பெண்கள் விஷயத்தில் ரொம்பவே வீக் . முரளி தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார்.

ஆனால், அதர்வா தன்னுடைய படங்களில் நடிக்கும் எல்லா நடிகைகளையும் காதலிப்பார் ஆனால் திருமணம் செய்து கொள்ள மாட்டார் .

இதுதான் இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசம். எனவே முரளியை காட்டிலும் அதர்வா மிக மோசம் என பயில்வான் கூறி இருக்கிறார்.

குடியால் அழிந்த இருசிகரங்கள்:

அதே போல் ரகுவரனுக்கு ஒரு சிறந்த மனைவியாக ரோகிணி அவருடன் வாழ்ந்து வந்தார். மிகச் சிறந்த பெண்மணி அவர். அவருக்காக பல விஷயங்களை தாங்கிக்கொண்டு பொறுத்துக் கொண்டு அவருடன் வாழ்ந்து வந்தார்.

ரகுவரன் ரோகிணியை விவாகரத்து செய்து பிரிந்த பிறகு கூட ரோகிணி ரகுரனை பற்றி ஒரு வார்த்தை கூட தவறாக இழிவாக பேசவே இல்லை.

அந்த விஷயத்தில் ரோகினி மிகச்சிறந்த பெண்மணி என பாராட்டலாம் என பயில்வான் கூறியிருந்தார்.

முரளி,ரகுவரன் இவர்கள் இருவருமே போதைக்கு அடிமையாகி தன்னுடைய வாழ்க்கை சீர் அழித்துக் கொண்டார்கள் என்பது தான் 100% உண்மை.

போதையில் இருந்தால் தான் நம்மால் சிறப்பாக நடிக்க முடியும் என நம்பி வாழ்க்கையை கெடுத்துக் கொண்டார்கள்.