பதின்ம வயசில்.. பூத்து குலுங்கும் பருவ மொட்டாக.. சுண்டி இழுக்கும் பிரவீனா..! பாத்தாலே கிறுகிறுன்னு வருதே..!

பிரபல சீரியல் நடிகை பிரவீனா தன்னுடைய பதின்ம வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இப்போதுதான் பூத்த புது மொட்டு போல பிரிட்ஜில் இருந்து எடுத்த ஆப்பிள் போல பிரஸ்ஸாக இருக்கிறீர்கள். பார்ப்பதற்கு இரண்டு கண்கள் போதாது போல் தெரிகிறது. அவ்வளவு அழகு என அவருடைய இளம் வயது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நடிகை பிரவீனா என்றாலும் கூட பிரியமானவள் என்ற சீரியலில் நான்கு மகன்களுக்கு அம்மாவாக நடித்திருந்தார். ஆனாலும் இளவட்டங்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார் நடிகை பிரவீனா.

மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்ற பிரவீனா இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வர ஆரம்பித்தார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வாழ்க்கை நகர்வுகளை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தில் நின்றார்.

தன்னுடைய தோட்டத்தில் பூக்கும் காய்கறிகள் பழங்கள் ஆகிய புகைப்படங்களை பகிர்ந்து கொள்வது தன் தோட்டத்திற்கு பாம்பு வந்தால் கூட அந்த பாம்பை பிடித்து கையில் வைத்துக்கொண்டு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மிரட்டுவது என பல்வேறு வித்தைகாட்டி வருகிறார் பிரவீனா.

சமீபத்தில் தமிழ் சீரியலில் நடிக்க வேண்டும் என்றால் ஒரே ஒரு அட்ஜஸ்ட்மெண்டை மட்டும் செய்து கொள்ள வேண்டும் எனக் கூறியிருந்தார்.

அதாவது தமிழ் சீரியல்களில் ஓவர் ஆக்டிங் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், மலையாளம் சீரியல்களில் சாதாரணமான ரியாக்சன் கொடுத்தால் போதும். தமிழ் சீரியல்களில் சிறு விஷயம் என்றால் கூட அதற்கு ஓவராக ரியாக்சன் கொடுக்க வேண்டி இருக்கிறது.

அதனை அழுத்தமாக காட்டுகிறார்கள் இங்குள்ள ரசிகர்களுக்கு இது பிடித்திருக்கலாம். ஆனால் மலையாள  சீரியல் ரசிகர்களுக்கு இது பிடிக்காது. சாதாரணமான எதார்த்தமான நடிப்பை தான் முதலாவது ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

ஆனால், தமிழ் இயக்குனர்கள் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள் இதனை அட்ஜஸ்ட் செய்து கொண்டுதான் நான் நடித்துக் கொண்டிருக்கிறேன் என கூறியிருந்தார். இந்நிலையில் இவருடைய பதின்ம வயது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.