42 வயதில் Trisha திருமணம்..? மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

திரிஷா பிரபல தயாரிப்பாளரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் இணைய பக்கங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா.

ஜோடி திரைப்படத்தில் நடிகை சிம்ரனின் தோழியாக சில காட்சிகளில் தோன்றிய நடிகர் திரிஷா அதனை தொடர்ந்து லேசா லேசா, மௌனம் பேசியதே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

அதனை தொடர்ந்து இவர் கால் வைத்த இடம் எல்லாம் வெற்றி வெற்றி என புகழின் அடுத்தடுத்த உயரத்துக்கு பறந்து கொண்டே இருந்தார் நடிகை திரிஷா.

இதையும் படிங்க : அவன் என் ஆளுடி…. நடுரோட்டில் குடுமிப்பிடி சண்டை போட்ட நயன்தாரா – திரிஷா – யாருக்காக தெரியுமா?

இடையில் இவரை சுற்றி வந்த சர்ச்சைகள் அனைத்துமே இவருடைய வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டன. குறிப்பாக இவருடைய குளியல் காட்சிகள் என்ற பெயரில் இணையத்தில் வெளியான வீடியோ காட்சி ஒன்று இவரை சுற்றிய மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பினாலும் அதுவே இவருக்கு பட வாய்ப்புகளையும் அள்ளி அள்ளி கொடுத்தது.

இப்படி சென்று கொண்டிருந்த நடிகை திரிஷாவின் திரை வாழ்க்கையில் திருமண வாழ்க்கை ஆரம்பம் ஆக இருந்தது. ஆனால், ஆரம்பம் ஆவதற்கு சில நாட்களுக்கு முன்பே நின்று போனது.

பிரபல தயாரிப்பாளர் வருண்மனியன் என்பவர் உடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நடிகை திரிஷா திருமணம் செய்து கொள்ளாமல் அந்த திருமணத்தை ரத்து செய்தார்.

அதன் பிறகு திருமணம் என்ற பேச்சை கேட்டாலே காததூரம் ஓடிவந்த நடிகர் திரிஷா தற்போது 42 வயதில் திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : “உடற்பயிற்சியில் எனக்கு பிடிச்ச பகுதி இது தான்..” வெறும் ப்ராவுடன் மல்லாக்க படுத்தபடி திரிஷா செல்ஃபி..!

தெலுங்கு திரையுலகையைச் சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் நடிகை திரிஷா என்றும் அந்த தயாரிப்பாளர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் கல்யாண வயதில் ஒரு மகன் இருக்கிறார் என்ற செய்தி தான் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

அந்த தயாரிப்பாளரை திருமணம் செய்து கொள்கிறாரோ…? அல்லது தயாரிப்பாளரின் மகனை திருமணம் செய்து கொள்கிறாரா..? என்று அக்கட தேசத்து ஊடகத்தில் கிசுகிசுக்களை பறக்க விட்டு வருகிறார்கள். இந்த விவகாரம் குறித்த மேலதிக தகவல்கள் அடுத்தடுத்து நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.