“பலருடன் உறவு கொண்டிருக்கிறேன்.. ஆனால்…” கூச்சமே இல்லாமல் ஓப்பனாக பேசிய ஓவியா..!

தமிழ் திரை உலகப் பொருத்தவரை மலையாளத் திரையுலக நடிகைகளின் ஆதிக்கம் அதிக அளவு உள்ளது என்று உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அந்த வகையில் கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை ஓவியா ஆரம்பத்தில் மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளி வந்த களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இவர் தனது முதல் படத்தில் எதார்த்தம் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் போதுமான அளவு மக்கள் ஆதரவு இவருக்கு கிடைக்கவில்லை.

நடிகை ஓவியா..

இந்நிலையில் நடிகை ஓவியாவிற்கு விஜய் டிவியில் நிகழும் பிரம்மாண்டமான ஷோவான பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த சீசனை கமலஹாசன் தொகுத்து வழங்க ஓவியா பிக் பாஸ் வீட்டில் அளப்பரிய பணிகளை செய்ததை அடுத்து இவருக்கு என்று ஒரு ஆர்மியை ரசிகர்கள் உருவாக்கினார்கள்.

இந்த ஆர்மியின் மூலம் படு ட்ரெண்டிங் ஆன நபராக மாறியதோடு மட்டுமல்லாமல் பலர் மத்தியிலும் ரீச் ஆகி பிரபலமான நபர்களில் ஒருவராக மாறியதை அடுத்து இவருக்கு பட வாய்ப்புகளும் வந்து சேர்ந்தது.

அந்த வகையில் பிக் பாஸ்க்கு பின் இவர் நடித்த 90 எம்எல், காஞ்சனா போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை கொடுக்கவில்லை என்றாலும் போதுமான ஆதரவை பெற்றார்.

இதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் அதிக அளவு ஃபாலோயர்களைப் பற்றி இவர் சின்னத்திரை, திரைப்படங்கள், விளம்பரங்கள், கடை திறப்பு விழா என பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு பலரையும் மகிழ்வித்தார்.

பலருடன் உறவு கொண்டிருக்கிறேன்.. ஆனால்…

சமூக வலைதளங்களில் படு பிஸியாக செயல்படும் இவர் அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விஷயம் தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

இதற்கு காரணம் இந்த பேட்டியில் தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசி இருக்கிறார். மேலும் அவர் அது பற்றி பேசும் போது காதலித்த பலர் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறியது கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

 

அதுமட்டுமல்லாமல் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே பலர் உடன் உறவுகளில் ஈடுபட்டு இருக்கிறேன். ஆனால் அவை அனைத்தும் தனக்கு பொருத்தமாக இருக்கவில்லை என்று கூச்சம் இல்லாமல் கூறிய இவர் பண விஷயத்திலும் பலர் தன்னை ஏமாற்றியதாக கூறி இருக்கிறார்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஏற்கனவே தேர்வு திரையுலகை புரட்டி போட்டு இருக்கும் ஹேமா கமிஷன் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்ற சூழ்நிலையில் நடிகை ஓவியா பலருடன் உறவு கொண்டது பற்றி ஓப்பனாக சொல்லி இருப்பது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூச்சம் இல்லாமல் ஓபன் ஆக பேசிய ஓவியா..

இந்நிலையில் பல பேருடன் உறவில் இருந்த விஷயத்தை கூச்சம் இல்லாமல் ஓபன் ஆக ஓவியா பேசியிருப்பதை பார்த்து பல ரசிகர்கள் இது மாதிரியான விஷயங்களை மறைத்து தான் இன்று பல நடிகைகள் டாப் இடங்களுக்கு வந்திருக்கிறார்கள்.

அவர்களே இது போன்ற விஷயங்களை பேசவும், சொல்லவும் தயங்கிய நிலையில் இவர் அந்த விஷயத்தை ஓப்பனாக உடைத்து இருப்பதை பார்த்து இவரது தைரியத்தை பாராட்டி இருக்கிறார்கள்.

எனினும் இது போன்ற விஷயங்களை ஓப்பனாக தெரிவிப்பதால் இவரை போல இருக்கும் பிரபலங்களின் ஃபாலோயர்கள் இவர்களை ஃபாலோ செய்வது போல இவர்கள் செய்யும் விஷயங்களை எல்லாம் செய்யக்கூடிய நிலை இருப்பதால் சமூக நன்மை கருதி சில விஷயங்களை மறைப்பது நன்மை என்று சொல்லி வருகிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையம் எங்கும் வேகமாக பரவி ரசிகர்களின் மத்தியில் பட்டிமன்றம் போட்டு பேசக்கூடிய அளவு மாறிவிட்டது.