நடிகர் பிரசாந்த் இரண்டாம் திருமணம்.. மிரள வைக்கும் ஜல்சா பார்ட்டி.. போட்டுடைத்த ரிப்போர்ட்டர்!.

நடிகர் பிரசாந்த் தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் மிக முக்கியமான ஒரு நடிகராக அறியப்படுகிறார். எல்லா காலங்களிலுமே ஒரு நடிகருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு என்பது கிடைத்து விடுவது கிடையாது.

ஆனால் பிரசாந்த் மாதிரியான சில நடிகர்களுக்கு எப்போதுமே வரவேற்பு என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அவரின் நடிப்பு திறமை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் பிரசாந்தின் அடுத்த திருமணம் குறித்த செய்திகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அதிகமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.

நடிகர் பிரசாந்த்

நடிகர் பிரசாந்த் ஒரு தமிழ் நடிகையை திருமணம் செய்து கொள்ள போவதாக ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. ஆனால் அதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகரான சபிதா ஜோசப் பிரசாந்த் குறித்து நிறைய தகவல்களை கூறியிருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது நடிகர் விஜய் பிரசாந்தை கோட் திரைப்படத்தில் அதிகமாக கலாய்த்து இருந்ததை பார்க்க முடிந்தது. ஆனால் நடிகர் விஜய் சினிமாவில் பெரும் நடிகராக மாறுவதற்கு முன்பிருந்த தமிழ் சினிமாவில் பெரிய நடிகராக இருந்தவர் நடிகர் பிரசாந்த்.

இரண்டாம் திருமணம்

ஒருமுறை நடிகர் பிரசாந்த் மற்றும் அஜித் இருவரும் நடிக்கும் வெவ்வேறு படங்களின் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது அஜித் நடித்துக் கொண்டிருக்கும் படப்பிடிப்பில் இருந்த பார்வையாளர்கள் பிரசாந்தை பார்த்தவுடன் அவரை நோக்கி ஓடி வந்த சம்பவங்கள் தமிழ் சினிமாவில் நடந்திருக்கின்றன.

அதே மாதிரி பிரசாந்த் நடித்த முதல் திரைப்படமான வைகாசி பொறந்தாச்சு திரைப்படம் 250 நாட்கள் ஓடி வெற்றியை கொடுத்தது. அப்படிப்பட்ட நடிகரை இப்பொழுதே இப்படி கேலி செய்வது சரி கிடையாது என்று கூறியிருந்தார். மேலும் பிரசாந்தின் இரண்டாம் திருமணம் குறித்து அவர் கூறும் பொழுது அவரது இரண்டாம் திருமணம் குறித்து அவரது தந்தையிடம் நான் நிறைய முறை கேட்டு இருக்கிறேன்.

போட்டுடைத்த ரிப்போர்ட்டர்

அந்தகன் படத்தின் வெளியீட்டு விழாவிலும் கூட அவர் கூறியிருந்தார். அவர் தனது மகனுக்கு திருமணம் செய்வதற்கு பெண் பார்த்து வருகிறார். நல்ல குணம் உள்ள பெண்ணாக இருந்தால் மட்டும் போதும் என்று தேடி வருகிறார் எனவே சீக்கிரத்தில் அவர்களுக்கு திருமணம் நடக்கும்.

மேலும் முதல் திருமணத்தை பொருத்தவரை மிக பெரிதாக அதை நடத்தினார் தியாகராஜன். கேளிக்கைகளுக்கு பஞ்சம் இல்லாமல் அந்த திருமணம் நடந்தது. அந்த வகையிலேயே இரண்டாவது திருமணம் நடக்குமா என்று தெரியவில்லை. ஆனால் இதையும் பெரிதாக தான் அவர் நடத்துவார் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறியிருக்கிறார் சபிதா ஜோசப்.