இதுக்காக அந்த தப்பை செஞ்சேன்..! படவாய்ப்புக்காக படுக்கை.. பகீர் தகவலை வெளியிட்ட நடிகை சோனா..!

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை சோனா. தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்த சோனா ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்.

தற்சமயம் இவர் சின்னத்திரையில் நாடகங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். 2001 இல் வெளியான பூவெல்லாம் உன் வாசம் திரைப்படம் மூலமாக முதன்முதலாக இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அந்த தப்பை செஞ்சேன்

அந்த திரைப்படத்தில் அனிதா என்கிற கதாபாத்திரத்தில் இவர் அறிமுகமானார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த சோனாவிற்கு பிறகு கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

வட இந்தியாவில் வளர்ந்த சோனாவிற்கு சின்ன சின்ன கவர்ச்சி ஆடைகளை அணிந்து கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிப்பது பெரிய விஷயமாக இல்லை. எனவே அப்படி நடித்து பிரபலமான இவர் தற்சமயம் இது குறித்து சில பேட்டிகளில் பேசியிருக்கிறார்.

படவாய்ப்புக்காக படுக்கை

அதில் அவர் கூறும் பொழுது நான் பெரிதாக கவர்ச்சியாக நடித்து விட்டேன் என்று அப்பொழுதிலிருந்து என்னை விமர்சனம் செய்து வந்திருக்கின்றனர். ஆனால் அது ஒன்றும் அவ்வளவு பெரிய கவர்ச்சியாக எனக்கு தெரிந்தது கிடையாது.

ஆனால் பொது இடங்களுக்கு செல்வதுதான் எனக்கு பயமுறுத்தும் விஷயமாக இருந்தது. ஒரு மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி வாங்க வேண்டும் என்றால் கூட அங்கு தொடர்ந்து என்னை விமர்சனம் செய்து வந்தனர்.

தகவலை வெளியிட்ட நடிகை சோனா

இதனால் வெகு வருடங்களாக நான் வெளிஉலகம் பக்கமே தலை காட்டாமல் இருந்து வந்தேன் என்று அவர் கூறியிருக்கிறார். பலரும் கவர்ச்சியாக நடிப்பது தவறு என்று என்னிடம் கூறினாலும் அப்பொழுது அதுதான் எனது குடும்பம் ஓடுவதற்கு தேவையாக இருந்தது.

எனவே அதற்காக நான் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்து வந்தேன் இதற்காக நிறைய அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகளையும் நான் சந்திக்க வேண்டி இருந்தது. இருந்தாலும் ஒரு காலகட்டத்திற்கு பிறகு அதிலிருந்து நான் வெளிவந்து விட்டேன்.

sona

ஆனாலும் எனக்கு இருந்த அந்த அடையாளம் மட்டும் மாறாமலே இருந்து வந்தது. தொடர்ந்து என்னை அனைவரும் கவர்ச்சி நடிகையாகவே பார்த்து வந்தனர். அந்த விஷயத்திலிருந்து என்னை மாற்றியது இந்த சின்னத்திரைதான்.

அந்த வகையில் நான் சின்னத்திரைக்கு நன்றி கூறி ஆக வேண்டும் சின்னத்திரையில் நாடகங்களில் நடிக்க துவங்கிய பிறகு குடும்பப் பெண்களே எனக்கு ரசிகைகளாக மாறினார்கள். அதற்குப் பிறகு இப்பொழுது நான் வெளியில் எங்கு சென்றாலும் சீரியல் நடிகையாக தான் என்னை பார்க்கிறார்களே தவிர யாரும் கவர்ச்சி நடிகையாக பார்க்கவில்லை இப்படியாக எனது பிம்பம் மாறி இருப்பது இப்பொழுது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார் நடிகை சோனா