ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி வருகின்ற வேளையில் தற்போது புதிய பூதம் ஒன்று கிளம்பி உள்ளது.

 

இந்த பூதத்தை இத்தனை நாள் தனது மனதுக்குள் பக்குவமாக வைத்திருந்த அந்த தமிழ் நடிகை தனது பல கால ரகசியத்தை தற்போது உடைத்ததை அடுத்து இந்த விஷயம் காட்டு தீ போல இணையங்களில் பரவி வருகிறது.

மனதுக்குள் பூட்டி வைத்த ரகசியம்..

பொதுவாகவே இந்த அட்ஜஸ்ட்மென்ட் விவகாரம் இன்று திரை உலகம் முழுவதும் மட்டுமல்லாமல் பெண்கள் வேலை பார்க்கும் அனைத்து துறைகளிலும் நடந்து வந்தாலும் திரை உலகில் அதிக அளவு காணப்படுவது தற்போது ஊடகங்களின் வழியாக தெரிந்து விட்டது.

உலகில் தெலுங்கு திரைபடத்தில் அண்மையில் வெளி வந்த குண்டூர் காரம் என்ற படத்தின் இயக்குனர் மீது தற்போது மீடு புகார் ஒன்றை பிரபல தமிழ் நடிகை கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இன்றைய காலகட்டத்தில் தெலுங்கு பேச தெரியாதவர்களும் அந்த படத்தில் இடம் பிடிக்கும் பாடல் வைப்பாக கூடிய காலகட்டத்தில் அதனை பார்க்க தவற விடுவதில்லை.

அந்த வகையில் குண்டூர் காரம் படத்தை இயக்கிய இயக்குனர் பற்றி உங்களுக்கு அதிகளவு சொல்லத் தேவையில்லை. இந்த படத்தில் மகேஷ்பாபு நடித்த இந்த படத்தை இயக்கியவர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ்.

இந்த இயக்குனர் மீது தான் தமிழ் நடிகை பூனம் கவுர் புகார் அளித்திருக்கிறார். இவர் தமிழில் நெஞ்சிருக்கும் வரை படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் மட்டுமல்லாமல் பயணம், வெடி, நாயகி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து தமிழ் ரசிகர்களின் வட்டாரத்தை அதிகளவு பிடித்து வைத்திருக்கக் கூடிய இவர் தெலுங்கிலும் பல படங்களில் நடித்து தனது ரசிகர் வட்டாரத்தை விரிவுபடுத்திக் கொண்டார்.

சர்ச்சை கருத்துக்களை வெளியிடுபவர்..

தெலுங்கில் பரபரப்பாக செயல்பட்டு வரும் இவர் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை வெளியிடுவார். இந்நிலையில் குண்டூர் காரம் இயக்குனர் திரி விக்ரம் ஸ்ரீநிவாஸ் மீது பல ஆண்டுகளுக்கு முன்பே மறைமுகமாக குற்றச்சாட்டுகள் பல வைத்திருக்கிறார்.

ஆனால் இன்று வரை என்ற எண்ணக் குற்றச்சாட்டு என்பதை வெளிப்படையாக பேசாத இவர் ஜானி மாஸ்டர் மீது எழுந்துள்ள பாலியல் புகாரை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது இயக்குனர் குறித்து பேசி இருக்கிறார் இந்த நடிகை.

மேலும் தான் சொன்ன விஷயத்தை தெலுங்கு நடிகர் சங்கம் மா ஏற்று கொண்டு இருந்தால் என்னை போல் பல பெண்கள் சீரழிந்து இருக்க வேண்டாம் என்ற விஷயத்தையும் கூறி இருக்கிறார்.

தெலுங்கு இருக்கும் முக்கிய பிரபலங்கள் இது குறித்து அந்த இயக்குனரிடம் கேள்வி எழுப்ப வேண்டும் என்ற வேண்டுகோளையும் தமிழ் நடிகை முன் வைத்திருக்கிறார். கடைசி வரை தனக்கு என்ன நடந்தது என்பதை வெளியிடாத இவர் அப்படி என்னதான் நடக்கும் என்ற எண்ணத்தை அனைவரது முன்னும் ஏற்படுத்தி இருக்கிறார்.