சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை ஸ்ருதி செல்வமா இது..? – அதிருது இன்ஸ்டா..!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி என்ற சீரியலில் சிம்ரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ருதி செல்வம் ( Shruthi Selvam ). இந்த சீரியலின் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்திற்கு எதிராக வில்லி ஸ்வேதா செய்யக்கூடிய சதிகளை முறியடிக்கும் விதமாக இவருடைய சிம்ரன் என்ற கதாபாத்திரம் அமைந்தது.

இந்த கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்த சீரியல் மூலம் தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை ஸ்ருதி செல்வம் இந்த சீரியலில் இருந்து பாதியிலேயே விலகிவிட்டார்.

இதனைத்தொடர்ந்து பிக்பாஸ் புகழ் சாண்டி ஹீரோவாக நடித்த 3:33 என்ற புதிய படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். பிக்பாஸ் பிரபலமும் நடன இயக்குனருமான சாண்டியுடன் ஜோடியாக நடித்தான் மூலம் ஸ்ருதி செல்வம்ஹீரோயினாக அறிமுகமானார்.

மேலும் மேலும் சில படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீரியல், சினிமா என இரண்டிலும் பிஸியாக இருந்தாலும் இணையப் பக்கங்களிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார்.

குறிப்பாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார் அம்மணி.

கொரோனா பேரலை பொதுமக்களை மட்டுமிலலமல் பல சினிமா மற்றும் சீரியல் பிரபலங்களையும் தாக்கியது. அதில் இவரும் சிக்கினார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் தன்னுடைய இணையப் பக்கத்தில் கொரோனா பாசிட்டிவ் வந்திருக்கிறது.

மருத்துவர்களின் அறிவுரைப்படி என்னை என்னுடைய வீட்டில் தனிமை படுத்து கொண்டிருக்கிறேன். தேவையான முன்னெச்சரிக்கை உபகரணங்களுடன் இருக்கிறேன். உங்களுடைய அன்பும் பிரார்த்தனையும் எனக்கு தேவை என்று கூறியிருந்தார்.

மேலும் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றும் கூறியிருந்தார். தொடர்ந்து கொரோநாவில் இருந்து மீண்ட இவர் மீண்டும் சினிமாவில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் சில ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.