ஆரம்பமே அதிரடி..! – தொடங்குது பிக்பாஸ் சீசன் 7 – யாரெல்லாம் இருக்காங்கன்னு பாருங்க..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்கள் முடிந்திருக்கின்றது நிலையில் தற்போது ஏழாவது சீசன் தொடங்க இருக்கிறது இந்த போட்டியில் கலந்து கொள்ள இருக்கக்கூடிய போட்டியாளர்களின் பட்டியல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் கமலஹாசன் தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்க போகிறார் என்ற அதிகாரப்பூர தகவல்களும் வெளியாகி இருக்கின்றன. மட்டுமில்லாமல் ஜூலை கடைசி வாரம் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து வாய்ப்பு இருக்கிறது என்றும் அது போல இதுவரை இல்லாத வகையில் இந்த முறை கேமராக்கள் அதிகளவில் வைக்கப்பட இருக்கின்றது.

இதுவரைக்கும் 67 கேமராக்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. தற்பொழுது 76 கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அது போல இந்த சீசனில் கலந்து கொள்ளக்கூடிய நபர்கள் பற்றிய விபரமும் வெளியாகி இருக்கிறது.

அதில் முக்கியமான ஆளாக இருக்கிறார் நடிகர் பயில்வான் ரங்கநாதன் மற்றும் நடிகை ரேகா நாயர். இவர்கள் இருவருக்கும் வெளியில் இருக்கக்கூடிய பழக்கம் எப்படி என்று ஊருக்கே தெரியும்.

நடிகை ரேகா நாயர் இரவின் நிழல் படத்தில் மேலாடை இல்லாமல் நடித்தது குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தவர் பயில்வான் ரங்கநாதன். அதனை தொடர்ந்து நடிகை ரேகா நாயார் கடற்கரையில் வாக்கிங் செல்லும்போது எதேச்சையாக பயில்வான் ரங்கநாதனை பார்த்து கடுமையாக திட்டி சண்டை போட்டது அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில், இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக நுழைய இருக்கின்றார்கள். இதனை அறிந்த ரசிகர்கள் ஆரம்பமே அதிரடியாக இருக்கிறது என்று கருத்துக்களை கூறி வருகின்றனர்.

அதனை தொடர்ந்து பிரபல தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன் மற்றும் மாகாபா ஆனந்த் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மட்டுமில்லாமல் மாகாபாவின் நெருங்கிய நண்பரான விஜய் டிவி சரத்தும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். ஏற்கனவே கலக்கப்போவது யாரு என்று நிகழ்ச்சியில் பிரபலமடைந்த சரத் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் தனக்குண்டான ரசிகர் வட்டாரத்தை விரிவடைய செய்து கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறார் என்று தெரிகிறது.

தொடர்ந்து பல பேர் பெயர்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அவர்கள் பற்றிய உறுதியான தகவல் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. தற்போது வரை ஐந்து போட்டியாளர்கள் உறுதியாகியுள்ளனர்.