“எனக்கு சாய் பல்லவி மீது கிரஷ் இருக்கு.. அது நடக்கும்-னு நம்புறேன்” – ஓப்பனாக கூறிய பிரபல நடிகர்..!

பிரபல நடிகை சாய் பல்லவி மீது தனக்கு கிரஷ் இருப்பதாக பிரபல நடிகர் ஒருவர் கூறியிருக்கிறார் பாலிவுட் படங்கள் ஹிந்தி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருபவர் நடிகர் குல்ஷன் தேவய்யா.

இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு சக நடிகை ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் 2020 ஆம் ஆண்டு தங்களுடைய 8 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு பிறகு தங்களுடைய திருமணத்தை முடித்துக் கொண்டனர்.

மனைவியை பிரிந்து விட்டாலும் கூட அவருடன் நட்பாக ஒரு நண்பனாக நான் அவருடன் உறவில் தான் இருக்கிறேன் என பேசி இருக்கிறார் நடிகர் குல்ஷன். தற்போது அவரிடம் நான் என்ன வேண்டுமானாலும் பேசலாம்.

நான் யாரேனும் யாரையாவது டேட் செய்தாலும் அவரிடம் கூறுவேன் என்று கூறியிருக்கிறார். மேலும் சாய் பல்லவி மீது என ஒரு கிரஷ் இருக்கிறது. இது சில காலமாகவே இருக்கிறது.

என்னிடம் அவரின் செல் போன் நம்பர் கூட இருக்கிறது. ஆனால் அவரை தொடர்பு கொள்ள எனக்கு தைரியம் இல்லை. அவர் அருமையான டான்ஸார், சிறப்பான நடிகை நினைக்கிறேன் என்றார் குல்ஷன்.

மேலும் கூறியதாவது, இது வெறும் கிரஷ் தான் அதை தாண்டி வேற எதுவும் கிடையாது. அவர் ஒரு சிறந்த நடிகை எப்பொழுதும் அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலே போதும். அது விரைவில் கிடைக்கும் என நம்புகிறேன்.

மற்றது பற்றி எனக்கு தெரியவில்லை. மற்றவை நடக்காவிட்டால் நான் என்ன செய்ய முடியும். ஒரு விஷயம் நடக்க வேண்டும் என்று இருந்தால் அது நடக்கும் நடக்காது என்று இருந்தால் நடக்காது..

ஒரு சிறந்த நடிகையுடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் போதும் அவருடன் தவறான எண்ணம் எதுவும் எனக்கு கிடையாது என பேசியிருக்கிறார். இவருடைய இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.