“இதை எதிர்பார்க்கவே இல்லையே..” – இதுவரை காட்டாத மோசமான கவர்ச்சியில் நயன்தாரா..!

நடிகை நயன்தாரா ( Nayanthara ) திருமணதிற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் ( Vignesh Shivan ) ‘போடா போடி’ என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதனால் வளர்ந்து வரும் இயக்குனர்களில் விக்னேஷ் சிவன் ஆவார்.

இதனை தொடர்ந்து இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம், பாவ கதைகள், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற அடுத்தடுத்த படங்களை இயக்கியுள்ளார்.

இதில் நானும் ரவுடிதான் எனும் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நயன்தாராவும் சேர்ந்து நடித்திருந்தார்கள். அப்போதுதான் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவிற்கும் முதன் முதலாக காதல் மலர்ந்தது.

Nayanthara

இந்நிலையில் தற்சமயம் இருவருக்கும் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இதனை அடுத்து இவர்கள் இருவரும் டெஸ்ட் டியூப் பேபி மூலம் குழந்தை தத்தெடுத்தார்கள். இரண்டு குழந்தைகளுக்கும் உயிர் உலகம் என்று வித்தியாசமான பெயர் சூட்டி மக்களை ஆச்சரியப்படுத்தினார்கள்.

இதையடுத்து விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த திருமணத்தை netflix தளத்தில் வீடியோவாக எடுத்து அதனை விற்று பல கோடிகள் சம்பாதித்தார்கள்.

Nayanthara

இந்த நிலையில், நடிகை நயன்தாராவிற்கும் இவருக்கும் நடந்த காதல் நிகழ்வுகளைப் பற்றி ஒரு பேட்டி ஒன்றில் விக்னேஷ் சிவன் எதார்த்தமாக கூறினார்.அதில் அவர் கூறியதாவது, நாங்கள் இருவரும் நானும் ரௌடி தான் எனும் திரைப்படத்தில் அறிமுகமானோம், அந்த படத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்தது.

மேலும் அந்த படத்தில் நயன்தாரா அவர்கள் அழுது கொண்டே ரோட்டில் நடந்து வரும் ஒரு சீன் எடுக்கப்பட்டிருக்கும் அப்படி காட்சி எடுக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் நயன்தாரா நடுரோட்டில் அழுவதை பார்த்துவிட்டு அவருடைய நண்பரிடம் அங்கே பார் நயன்தாரா நயன்தாரா என்று கத்திக்கொண்டே நயன்தாராவிற்கு அருகில் சென்றார்.

பிறகு நயன்தாராவிடம் ஏன் அழுகிறீர்கள் என்ன ஆச்சு என்று விசாரித்தார். பிறகு படக்குழுவினர் வந்து இது ஒரு சூட்டிங் ஸ்பாட் உள்ளே வரக்கூடாது என்று அவரை அனுப்பி வைத்தனர்.

Nayanthara

இந்த நிலையில், மேலும் மற்றொரு முறை அவர் அழுது கொண்டு ஓடி வரும் போது எல்லோரும் ஒன்று கூடி விட்டார்கள். அதனால் காட்சி எடுக்க முடியாமல் போனது பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்த காட்சி யாருமே இல்லாத இடத்தில் இருந்து எடுக்கப்பட்டது என கூறியிருந்தார்.

Nayanthara

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தயாராக இருக்கிறார் நடிகை நயன்தாரா என்று கூறுகிறார்கள். திருமணதிற்கு பிறகு நயன்தாரா தயாரிப்பில் வெளியான திரைப்படங்கள் படு தோல்வியை சந்தித்தன.

மட்டுமில்லாமல், நயன்தாரா ஆரம்பித்த புதிய அழகு சாதன தயாரிப்பு நிறுவனமும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வரவேற்பு பெறவில்லை.இதனால், கடும் பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ளார் நயன்தாரா என்று கூறுகிறார்கள்.

Nayanthara

எனவே, ஏற்பட்டுள்ள இந்த நஷ்டங்களை ஈடுகட்ட படங்களில் நடிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளார் என்று கூறுகிறார்கள். மேலும், பாலிவுட்டில் சல்மான் கான் நடிக்கவுள்ள புதிய படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் நயன்தாரா என்றும் இந்த படத்தில் இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சி காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Nayanthara

அதே சமயம், இந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாக வாய்ப்புள்ளது எனவும் கூறுகிறார்கள். நயன்தாரா-வின் இந்த முடிவை பார்த்து ஷாக் ஆகி கிடக்கின்றனர் ரசிகர்கள்.