“இதுக்கு நான் ஸ்ரீரெட்டி-யை தடவிட்டு போயிடுவேன்..” – மேடையில் பதறிய விஷால்..! – என்ன நடந்தது..?

இதை தடவுவதற்கு நான் ஸ்ரீரெட்டியை தடவிட்டு போயிடுவேன் என்று நடிகர் விஷால் பதற்றத்துடன் மேடையிலேயே கூறியிருக்கிறார். ஏற்கனவே ஸ்ரீரெட்டிக்கும் விஷாலுக்கும் இருக்கக்கூடிய வாய்க்கா தகராறு.. அமேசான் தகராறு.. அனகோண்டா தகராறு.. போன்ற விவகாரங்கள் எல்லாம் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

இந்நிலையில், பொது மேடை ஒன்றில் இதை தடவுவதற்கு பதிலாக நான் ஸ்ரீரெட்டியை தடவிட்டு போயிடுவேன் என்று நடிகர் விஷால் பதற்றத்துடன் கூறியுள்ளார்.

இவர் இப்படி கூறுவதற்கு என்ன காரணம்..? என்று பார்க்கலாம். சமீபத்தில், நடிகர் விஷால் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த பேட்டியின் போது அவரிடம் பல்வேறு விதமான கேளிக்கையான கேள்விகள் எழுப்பப்பட்டன.

ஒரு கட்டத்தில் அவருக்கு ஒரு சிறு விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. அதாவது கண்களை கட்டிக்கொண்டு கண்ணாடி பெட்டிக்குள் இருக்கும் பொருளை தொட்டு, தடவி பார்த்து அது என்ன பொருள் என்று கண்டுபிடித்து சொல்ல வேண்டும்.

அந்த வகையில் தொகுப்பாளர் விஷாலின் கண்களை கட்டி விடுவார். ஒரு டேபிளின் மீது வைக்கப்பட்டுள்ள கண்ணாடி பெட்டியில் ஏதாவது ஒரு பொருளை கொண்டு வந்து வைப்பார்கள். அதனை கண்கள் கட்டிய நிலையில் அந்த பொருளை தொட்டு பார்த்தால் என்ன பொருள் என்று விஷால் கூற வேண்டும். இதுதான் அந்த போட்டி.

முறையே விஷாலின் கண்கள் கட்டப்பட்டது. அந்த கண்ணாடி பெட்டிக்குள் முதலில் புடலங்காயை வைத்தார் தொகுப்பாளர்.

அதனை தொட்டு பார்த்து என்ன பொருள் என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறினார் விஷால். அதன் பிறகு கண்களை திறந்து புடலங்காய் என்பதை கண்டறிந்தார். அதன் பிறகு ஒரு ஓணானை அந்த கண்ணாடி பெட்டிக்குள் வைத்தார் தொகுப்பாளர்.

இதனை தொட்டு அதிர்ந்து போன விஷால் என்ன இது  நேழிகிறது.. நாய் குட்டி எதையாவது கொண்டு வந்து வச்சிட்டிங்களா..? என்று என்று கூறினார். அதன் பிறகு கண்ணை அவிழ்த்து காட்டிய பொழுது ஓணானை பார்த்து பயந்து போனார் விஷால்.

அப்போது இதை தடவுவதற்கு பதிலாக நான் ஸ்ரீரெட்டி-யை தடவிட்டு போயிடுவனே என்று பதற்றத்துடன் பேசியிருக்கிறார்.இவருடைய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.