“அப்பா வயசு.. அந்த இடத்தில் தொட்டு.. ADJUSTMENT-க்கு அழைத்தார்.. – பிரபல இயக்குனர் மீது களவாணி நடிகை புகார்.!

களவாணி திரைப்படத்தில் நடிகர் விமலின் தங்கையாக நடித்த பிரபலமானவர் நடிகை மனிஷா பிரியதர்ஷினி.

தற்பொழுது சீரியல் மற்றும் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் திடீரென இவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு இருக்கிறது. அதன் பின்னணியில் இருக்கக்கூடிய ரகசியங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக போட்டு உடைத்து இருக்கிறார்.

வாய்ப்பு வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள் இயக்குனர்கள் மற்றும் ரைட்டர்கள். அதனை ஏற்காத காரணத்தினால் தான் எனக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது என இணையதளம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார் நடிகை மனிஷா பிரியதர்ஷினி.

எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரைட்டர் நான் குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது உதவி எழுத்தாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது இருந்தே எனக்கு அவரை தெரியும். அவரை அப்பா போலதான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

கல்யாணப்பரிசு சீரியல் வரும் பொழுது அவர் அந்த சீரியலில் முக்கியமான ரைட்டாக இருந்தார். அவர் மூலமாகத்தான் எனக்கு அந்த சீரியல் வாய்ப்பே கிடைத்தது. ஒருமுறை அலுவலகத்தில் வாய்ப்பு கேட்டு நானும் அம்மாவும் அவரை சந்தித்தோம்.

நாங்கள் இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறோம் என்பதால் அவர் அப்படி கேட்டாரா..? என்று தெரியவில்லை. நான் உங்களுக்கு சான்ஸ் வாங்கி கொடுத்துட்டேன் பதிலுக்கு நீங்கள் எனக்கு என்ன கொடுக்க போறீங்க என்று கேட்டார்.

எனக்கும் அம்மாவுக்கும் புரியவில்லை. நீங்கள் சீரியலில் வாய்ப்பு வாங்கி கொடுத்தால் எங்களுடைய சம்பளத்தில் கமிஷன் கொடுத்து விடுகிறோம் என்று கூறினோம். உடனே, எனக்கு பணம் பெரிது கிடையாது. நானே சீரியலில் நிறைய பணம் சம்பாதிக்கிறேன்.

பணம் எனக்கு பெரிய விஷயமே கிடையாது. வேற என்ன எனக்கு கொடுப்பீர்கள்.. என்று கேட்டார். அப்போது எங்களுக்கு அவர் என்ன எதிர்பார்க்கிறார்..? என்று புரிய ஆரம்பித்தது. உடனே நாங்கள் அந்த மாதிரி குடும்பம் கிடையாது.. எங்களுக்கு அப்படிப்பட்ட வாய்ப்புகள் வேண்டாம்.

இத்தனை நாட்களாக கஷ்டப்பட்டு தான் வாய்ப்பு பெற்றோம்.. கஷ்டப்பட்டு தான் நடித்தோம். இனியும் அதேபோல பெற்றுக்கொள்கிறோம். இப்படியான பட வாய்ப்புகள் எங்களுக்கு தேவையில்லை என்று ரைட்டரின் முகத்தில் அடித்தார் போல் பேசிவிட்டார் என் அம்மா.

இதனை கேட்ட அவர் இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறீர்கள். அதற்கு ஏற்றார் போல் உங்களை மாற்றிக் கொண்டிருப்பீர்கள் மாறி இருப்பீர்கள் என்று நினைத்து தான் கேட்டேன். ஆனால் நீங்கள் இன்னும் மாறாமல் இருக்கீங்க.. என்று கூறினார்.

நாங்கள் எப்போதும் மாற மாட்டோம் என்று கூறி வந்து விட்டேன். இதற்கு முன்பு என்னுடைய பிறந்தநாள் அன்று அவருடைய அலுவலகத்தில் ஒருமுறை அவரிடம் ஆசீர்வாதம் வாங்க சென்றிருந்தேன்.

அப்போது அவர், ஆசிர்வாதம் செய்யும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது என்று கூறி என்னுடைய இரண்டு அப்படியே பிடித்து தூக்கி.. அப்படியே இறுக்கமாக கட்டிப்பிடித்து.. நெருக்கமாக அணைத்துக்கொண்டார்.

நான் அதிர்ந்து போய் விட்டேன். உடனே, அவரை தட்டி விட்டு ஓடி வந்து விட்டேன். எனக்கு இஷ்டம் இல்லாததால் அவரை தள்ளிவிட்டு வந்து விட்டேன்., அதன் பிறகு நாங்கள் அதனை மறந்து விட்டோம். அவரும் மறந்து விட்டார் என்று நினைத்தோம்.

ஆனால் அவர் அதை மறக்காமல் மனதையே வைத்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பில் எனக்கு கடினமான காட்சிகளை கொடுப்பது.. தொடர்ச்சியாக விடுப்பு இல்லாமல் என்னுடைய காட்சிகள் இருப்பது போன்ற சூட்டிங் ஷெட்யூலை அமைப்பது.. நிறைய காட்சிகள் படமாக்கினாலும் அதை அனைத்தையும் நீக்கி விடுவது.. என தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் அவருடைய ஆசைக்கு நான் இனங்காத காரணத்தினால் என்னுடைய கதாபாத்திரத்தை சீரியலில் காலி செய்து விட்டார்கள். நான் நடிக்க முடியாமல் போய்விட்டது என்று கூறியிருக்கிறார் மனிஷா பிரியதர்ஷினி.