13 வருஷம் கழிச்சு வைரல் ஆகியிருக்கேன்.. அடையாளம் தெரியாமல் மாறிய சூப்பர் சிங்கர்..!

கடந்த இரண்டு வார காலமாக ஒரு தொலைக்காட்சி ரியாலிட்டி இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்கான ஆடிஷனில் கலந்து கொண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வந்தது.

அந்த வீடியோ காட்சி 2010 ஆம் ஆண்டு ஜெயா டிவி தொலைக்காட்சியில் நடைபெற்ற குரல் தேடலுக்கான ஹரியுடன் நான் என்ற நிகழ்ச்சி ஒன்றிற்காக பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், 13 ஆண்டுகள் கழித்து திடீரென இந்த வீடியோ வைரலாவதற்கான காரணம் என்ன..? என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த வீடியோவில் கலந்து கொண்டவர் தற்போது திருநங்கையாக மாறி இருக்கும் ஐஸ்வர்யா என்பவர் தான். தன்னுடைய பள்ளி காலத்திலேயே தனக்குள் பெண்மை அதிகமாக இருப்பதை உணர்ந்த ஐஸ்வர்யா தன்னுடைய குடும்பத்தினரிடம் இது குறித்து சொல்லாமலேயே மறைத்து வைத்திருக்கிறார்.

நாட்கள் செல்லச் செல்ல இவர்களுடைய நடவடிக்கை அனைத்துமே பெண்கள் போல இருந்த காரணத்தினால் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

திருநங்கைகளிடம் அடைக்கலம் புகுந்த இவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு முழு திருநங்கையாக மாறி இருக்கிறார்.

தற்போது சக திருநங்கைகளுடன் சேர்ந்து ஜல புல ஜங் என்ற youtube சேனல் ஒன்றை நிர்வாகித்து வருகிறார். இப்படியாக பிரபலமாக இருக்கிறார் ஐஸ்வர்யா.

இந்நிலையில், 13 ஆண்டுகளுக்கு முன்பு கலந்து கொண்ட இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் கேள்வி எழுப்பிய பொழுது 13 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ அதுவும் என்னுடைய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது என்பதை நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.

ஆனால் ஒரு பக்கம் வேதனையாக இருக்கிறது. ஏனென்றால், 13 ஆண்டுகளுக்கு முன்பு நான் எப்படி இருந்தேனோ.. அது போல நான் இப்போது கிடையாது.

அப்படி இருப்பதை நான் வெறுத்தேன்.. அதனால் தான் ஒரு முழு பெண்ணாக மாறி இருக்கிறேன். இப்படி நான் முழு பெண்ணாக மாறியிருக்கும் இந்த தருணத்தில் நான் ஆணாக இருந்த போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ வைரலாகி கொண்டிருப்பதை நினைத்தால் எனக்கு ஒரு விதமான நெருடலாக இருக்கிறது. கூச்சமாக இருக்கிறது.. அசிங்கமாக இருக்கிறது.

ஆனால் 13 ஆண்டுகளுக்கு முன்பு எனது கிடைக்காத அங்கீகாரம் தற்போது கிடைக்கிறது என்ற விதத்தில் எனக்கு மகிழ்ச்சி தான்.

நான் 13 ஆண்டுகளுக்கு முன்பு முறையாக இசை கற்று இருக்கவில்லை. ஆனால் தற்பொழுது இசையில் டிப்ளமோ மற்றும் இளங்கலை படித்து இருக்கிறேன். எனக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.

திரைப்படங்களிலும் பாடல்களை பாட வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருக்கிறது. நடக்கிறதா..? என்று பொறுத்திருந்து பார்ப்போம் என பேசி இருக்கிறார் திருநங்கை ஐஸ்வர்யா.