“நான் என்ன காண்டம் யூஸ் பண்றேன்..” ஃபாத்திமா பாபு வெளிப்படையான பேச்சு..!

சின்னத்திரை தொலைக்காட்சிகளில் ஆரம்ப நாட்களில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி அதன் பின் வாய்ப்பு இழந்த நிலையில் சினிமாவில் சின்ன, சின்ன ரோல்களை செய்து அசத்தியவர் ஃபாத்திமா பாபு.

இவர் செய்தி வாசிப்பாளராக திகழ்ந்த போது தமிழில் இவரது உச்சரிப்பை பார்த்து அனைவரும் அசந்து விட்டார்கள். அந்த அளவு தமிழை நேர்த்தியான முறையில் உச்சரித்து செய்திகளை வழங்குவதில் இவர் திறமைசாலியாக விளங்கினார்.

மேலும் இவர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளி வந்த கல்கி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் பெரியளவு வந்து சேராத நிலையில் பிக் பாஸ் 3 நிகழ்வில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்ட போது பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்தது. எனினும் அவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன்னால் முடிந்தவரை பிக் பாஸ் வீட்டில் இவர் தனித்துவத்தோடு விளையாடினார்.

இதனை அடுத்து தமிழகம் முழுவதும் இவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மேலும் இவர் சமுதாய அக்கறையோடு சில கருத்துக்களை வெளியிடுவார். அந்த கருத்துக்கள் ரசிக்கும்படி இருக்கும். எனவே ரசிகர்கள் அனைவரும் இவர் ஏதாவது பேச மாட்டாரா? என்று காத்திருப்பார்கள்.

இதனை அடுத்து வயது முதிர்ந்த நிலையில் ஒரு சில சீரியல்களில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் பாத்திமா பாபு இணையதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய நபர். அந்த வகையில் இவரிடம் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வியால் கடுப்பாக்கி விட்டார்.

இந்து, முஸ்லிம் என்று பேசி வந்த அந்த நபரிடம் இவர் பொது மேடையில் என்ன பிராண்ட் காண்டம் யூஸ் பண்ணுவீர்கள் என்று கூட கேட்பீர்களா? என்று கோபத்தோடு கேள்வி கேட்டிருக்கிறார்.

அத்தோடு பொது மேடையாம்.. இல்ல.. பொது மேடை என்று அந்த ரசிகனுக்கு பதிலடி கொடுத்திருக்க கூடிய இந்த சம்பவம் தான் தற்போது வைரலாக இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது.

எனவே இது போல கடுப்பு ஏற்றக்கூடிய வகையில் ரசிகர்கள் கேள்வி கேட்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது எது தேவையோ அதைத்தான் கேட்க வேண்டும் அதை விடுத்து வேண்டாததில் மூக்கை நுழைத்தால் இப்படித்தான் இருக்கும் என்பதற்கு உதாரணமாக இந்த பதிலடி