பாதியில் விட்டுட்டு போன பிரபுதேவா..!! நெத்தியடி பதில் கொடுத்த மதுபாலா..! பலரும் அறியாத ரகசியம்..!

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் பிரபுதேவாவின் டான்ஸ்க்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை. அந்த அளவு வித்தியாசமான நடனத்தை ஆடி ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர்.

திரை உலகில் ஆரம்ப காலத்தில் டான்ஸ் மாஸ்டராக திகழ்ந்தவர். பின்னர் நடிகராகவும் நடிக்க ஆரம்பித்தார். தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களாக திகழ்ந்த சிம்ரன், மீனா, மதுபாலா, ரோஜா ஆகியோரோடு ஜோடி போட்டு நடித்து தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார்.

தற்போது இயக்குனராக மாறி பல படங்களை இயக்கிக் கொண்டிருக்கும் இவர் பாலிவுட் படத்தையும் இயக்க இருக்கிறார். இதனை அடுத்து இவரோடு இணைந்து நடித்த நடிகை மதுபாலா, பிரபுதேவா குறித்து கூறிய செய்தி ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

நடிகை மதுபாலாவும், பிரபுதேவாவும் இணைந்து மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தில் வெளி வந்த அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. குறிப்பாக தண்ணீரை காதலிக்கும் என்ற பாடல் இன்று அளவும் ரசிகர்களால் ரசிக்கப்படக்கூடிய ஒன்றாக உள்ளது.

அந்தப் பாடலுக்கு நடனம் அமைக்கும் போது தான் மதுபாலாவுக்கும், பிரபுதேவாவுக்கும் இடையே ஈகோ வந்ததாக கூறியிருக்கிறார்.

மேலும் இதற்கு காரணம் பிரபுதேவா என்று அவர் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் பிரபுதேவா அவருடைய போர்சனை அவர் நடனம் ஆடி ப்ராக்டிஸ் செய்து விட்டார்.

அதன் பிறகு மதுபாலாவுக்கு அவருடைய உதவியாளரை வைத்து சொல்லிக் கொடுக்க சொல்லிவிட்டு போய்விட்டார். இந்த சம்பவம் மதுபாலாவுக்கு மிகப்பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே பாதியில் மதுபாலாவிற்கு கற்றுக் கொடுக்காமல் வெளியேறிய பிரபுதேவாவிற்கு பதிலடிக்கு கொடுக்கக் கூடிய வகையில் தனது ஈகோவை அதிகரித்துக் கொண்டு அந்த நடனத்தை சிறப்பாக ஆடி ரசிகர்களின் மத்தியில் பாராட்டை பெற்றதாக கூறியிருக்கிறார்.

இந்த தகவல் தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது. அதுமட்டுமல்ல இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து முன்னேறுவதற்கு ஈகோவும் பக்க பலமாக இருக்கும் என்பதை இந்த நிகழ்வு சுட்டிக்காட்டி உள்ளது என ரசிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.