சத்தம் இல்லாமல் விவாகரத்து பெற்ற ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா..! இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

தமிழ் திரை உலகத்தின் தமிழ் சினிமாவை மற்றொரு கோணத்தில் எடுத்துக்காட்டியதோடு பிரம்மாண்டத்தை புகுத்திய இயக்குனர் ஷங்கர் 2.0 படத்திற்குப் பிறகு தற்போது இந்தியன் 2 மற்றும் ராம்சரனின் கேம் ரஜேஞ்சர் படங்களின் வேலைகளில் படு பிஸியாக இருக்கிறார்.

ஆரம்ப நாட்களில் ஜென்டில்மேன் படத்தை ஷங்கர் இயக்கிய போது அது வரை தமிழ் திரையுலகம் கண்டிராத பிரம்மாண்டத்தை பார்த்தார்கள். இதன் மூலம் தமிழ் திரைப்பட உலகில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய டைரக்டர் என்ற பெயர் ஷங்கருக்கு கிடைத்தது.

தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து அதில் பக்குவமாக பயணம் செய்து வரும் இவர் தனது சொந்த வாழ்க்கையில் இரு மகள்களும் தான் சொன்னதை கேட்காமல் இருக்கும் நிலையை நினைத்து துயரத்தில் ஆழ்ந்திருக்கிறார்.

தனது இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் விருமன் படத்தில் கார்த்தியோடு இணைந்து நடித்து தனது அபார நடிப்புத்திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். எனினும் டாக்டர் படித்த இவர் சினிமாவில் நடிக்க வேண்டாம் என்றுதான் தனது மகளுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்.

அந்த வகையில் இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா கிரிக்கெட் வீரரான ரோகித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சுமார் 2000 கோடி சொத்துக்கு அதிபதியான இருக்கும் ரோகித்துக்கு திருமணம் செய்து வைத்த ஆறு மாதத்தில் மருமகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்கள்.

இதனை அடுத்து ஷங்கர் மகளின் வாழ்க்கை கானல் நீரானதோடு மட்டுமல்லாமல் மனம் உடைந்து போன இவர் சட்டப்படி திருமணம் ஆகி ஆறு மாதம் கழித்து தான் விவாகரத்து செய்ய முடியும் என்பதால் இத்தனை நாட்களும் காத்திருந்தார்.

குடும்பத்தார் எவ்வளவோ எடுத்துப் பேசி புரிய வைத்தும் புரிந்து கொள்ளாத ஐஸ்வர்யா தன் கணவரை தற்போது சைலன்டாக விவாகரத்து செய்து விட்டு அப்பா வீட்டில் இருக்கிறார்.

இந்நிலையில் ஷங்கரின் மகன் மற்றும் இளைய மகள் அதிதி ஷங்கரோடு, ஐஸ்வர்யா ஷங்கர் எடுத்து இருந்த புகைப்படத்தை தற்போது இணையங்களில் பதிவேற்றி இருக்கிறார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் புகைப்படத்தை பார்த்து சந்தோஷம் பெற்றதை விட ஷங்கரின் மகள்களால் இப்படிப்பட்ட நிலைமை அவருக்கு ஏற்பட்டு விட்டதே என்று வருந்தினார்கள். தற்போது இந்த புகைப்படமானது இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.