களவாணி சினிமா பாணியில மருத்துவமனைக்குள்ள புகுந்து காதலியை அலேக்கா தூக்கி சென்ற நடிகர் விமல்..!

தமிழ் திரையுலகில் எண்ணற்ற நடிகர்கள் நடித்து வருவதோடு சிலர் நடிக்க வந்த சில நாட்களிலேயே எங்கே என்று கேட்கக் கூடிய அளவு காணாமல் போய்விடுகிறார்கள். ஆனால் பசங்க திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமான நடிகர் விமல் தனது எதார்த்த நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தினார்.

இந்த காரணத்தால் இவருக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் எத்தன், வாகை சூடவா, தூங்கா நகரம் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

மேலும் இவர் சுந்தர் சி இயக்கிய கலகலப்பு படத்தில் அனைவரையும் கலகலக்க வைத்தவர். சற்குணம் இயக்கத்தில் வெளி வந்த களவாணி படத்தில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்திய இவர் பாண்டியராஜ் இயக்கிய கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் காமெடியில் கலக்கியவர்.

இதனை அடுத்து வித்தியாசமான கெட்டப்பில் மஞ்சள் பை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.அடுத்து பட்ஜெட் படங்களின் நாயகனாக டிஸ்ட்ரிபியூட்டர்கள் முன் விமல் திகழ்ந்தார் என கூறலாம்.

இதனை அடுத்து இவரது படங்கள் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது. எனினும் இவர் நடிப்பில் வெளி வந்த மன்னர் வகையறா திரைப்படம் இவருக்கு ஒரு கம்பேர் படமாக இருந்தது. தற்போது வெப் தொடர்களில் நடித்து வரும் இவர் மீண்டும் சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

நடிகர் விமல் 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம் ஒரு ரியல் சினிமாவில் நடப்பது போல அமைந்து இருந்தது தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் இவர் பல வருடங்களாக காதலித்து வந்த அக்ஷயா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருக்கிறார்.

இவர்கள் இருவரின் காதலையும் இரு விட்டாரும் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் ஓடிப் போய் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட விமல் மருத்துவமனையில் மருத்துவராக பணி புரியும் தனது காதலியை மருத்துவமனைக்குள்ளே புகுந்து அழகாய் தூக்கி சென்று திருமணம் செய்து விட்டார்.

திருமணம் செய்து கொண்டு சிறப்பாக வாழ்ந்து வரும் இவர்களுக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறார். இதனை அடுத்து அண்மையில் இவரது குடும்பப் படம் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் விமலா இப்படி திருமணம் செய்து கொண்டார் என்ற பேச்சையும் ஏற்படுத்தி விட்டது.