“அந்த சீன்ல நடிக்கணும்ன்னு சொல்லி கூப்டுவாங்க.. ஆனா நிஜமாவே..” ரகசியம் உடைத்த ஷகீலா..!

தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதாவுக்கு அடுத்தப்படியாக ரசிகர்களின் மனங்களில் ஒரு மிகப்பெரிய ஏக்கத்தை நடிகைகளில் ஒருவர் என்றால் அது ஷகீலா தான். 1990களில், கேரளாவில் மம்முட்டி, மோகன்லால் படங்களை விட அதிக ரசிகர் கூட்டம் மொய்த்தது ஷகீலா நடித்த தியேட்டர்களை தான்.

தமிழில் சில படங்களில் கவுண்டமணி, வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்ட சில நடிகர்களுக்கு ஜோடியாகவும் ஷகீலா நடித்திருக்கிறார். சில படங்களில் காமெடி ரோல்களிலும் செய்திருக்கிறார். ஆனால் கவர்ச்சி படங்களில் பலவற்றில் ஷகீலாவின் கிளுகிளுப்பான நடிப்பு ரசிகர்களின் இரவு தூக்கத்தை கெடுத்தது.

அதுவும் ஆண்ட்ராய்டு போன் பயன்பாட்டில் இல்லாத அந்த காலகட்டத்தில், அதிகாலை காட்சிகளும், இரவு 11 மணி காட்சிகளுக்கும் ஷகீலா படங்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி இருந்தது. நகரில் பல இடங்களில் இப்போது கட்சி போஸ்டர்களை போல, 25 ஆண்டுகளுக்கு முன் ஷகீலா போஸ்டர்கள்தான் அதிகளவில் சுவர்களை ஆக்கிரமித்திருந்தன.

அதே வேளையில், படங்களில் கவர்ச்சி காட்டி நடிக்கும் நடிகை என்பதால், மற்ற நடிகைகளை விட ஷகீலாவுக்கு அதிகப்படியான பாலியல் துன்புறுத்தல், அழைப்புகள் நிறைய இருந்திருக்கின்றன. படப்பிடிப்பு தளத்திலும் கூட காட்சியை பிடிக்கும் நேரங்களில் நிறைய அத்துமீறல்களை ஷகீலா சந்தித்து இருக்கிறார். அதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகை ஷகீலா வெளிப்படையாகவே பேசி இருக்கிறார்.

அதுகுறித்து ஷகீலா கூறுகையில், என்னிடம் படத்தில் நடிக்க அழைக்கும் போது படுக்கை அறை காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று சொல்லியே படங்களில் ஒப்பந்தம் செய்வார்கள் ஆனால் படப்பிடிப்பு தளங்களில் கேமராவிற்கு முன்பே என் உடன் நிஜமாகவே அப்படி இருப்பதற்கு சில நடிகர்கள் முயற்சி செய்து இருக்கிறார்கள், என்ற ரகசியத்தை போட்டு உடைத்திருக்கிறார் நடிகை ஷகீலா. சாதாரண நடிகைகளிடம் தங்களது ‘வேகத்தை’ காட்டும் ஷகீலா போன்ற கவர்ச்சி பாம்கள் சிக்கினால் ‘பதம்’ பார்க்க துடிப்பார்களே?