தூங்கும் முன்பு இதை செய்யும் இந்த கெட்ட பழக்கும் இருக்கு..! – நயன்தாரா ஓப்பன் டாக்..!

லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியவர்.

நடிகை நயன்தாரா..

நடிகை நயன்தாரா 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் திரைப்பட உலகிற்கு அறிமுகமானார். இதனை அடுத்து 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்தார்.

மலையாளம், தமிழ் மொழி மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் நடித்து இருக்கும் இவர் அண்மையில் பாலிவுட் படத்தில் நடித்திருக்கிறார்.

அட்லி இயக்கிய ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் இவருக்கு மேலும் பல பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் இவர் பல ஆண்டுகளாக காதலித்த இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு பிள்ளைகளுக்கு வாடகைத் தாயின் மூலம் அம்மாவாக மாறி இருக்கிறார்.

இந்நிலையில் அண்மையில் இவர் நடிப்பில் வெளி வந்த திரைப்படங்கள் பெயர் சொல்லும் அளவு ஓடவில்லை. எனினும் திரைப்படங்களில் நடிப்பதோடு இல்லாமல் பலவிதமான பிசினஸ்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி தனது குடும்பத்தோடு இருக்கும் புகைப்படங்களையும் குழந்தைகளின் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களின் மனதை இடம் பிடிப்பார்.

தூங்கும் முன்பு..

 

இந்நிலையில் இவர் தொட்டதெல்லாம் தோல்வி என்று சொல்லக்கூடிய வகையில் அடி மேல் அடி இவருக்கும் மட்டுமல்லாமல் இவரது கணவர் விக்னேஷ் சிவனுக்கும் ஏற்பட்டு வருவதாக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகிறது.

எதையும் தாண்டி நயந்தாரா தனது லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொள்வாரா? என்பது இனிவரும் நாட்களில் தான் தெரிய வரும்.

இந்த நிலையில் தூங்கும் போது இதை செய்யும் கெட்ட பழக்கம் தனக்கு இருப்பதாக நயன்தாரா வெளிப்படையாக சொல்லி இருக்கும் தகவலானது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இது பற்றி இவர் கூறுகையில் இரவு நேரங்களில் தனக்கு பேய், பயம் கிடையாது இருந்தாலும் கூட விளக்கை அணைக்கும் பழக்கமும் கிடையாது என்பதை தெரிவித்திருக்கிறார்.

உறங்குவதற்கு முன்பு லைட்டை எரிய விட்டுத்தான் தூங்குவேன் இந்த கெட்ட பழக்கம் எனக்கு சிறு வயது முதல் கொண்டே இருக்கிறது என்பதை தெளிவாக கூறிவிட்டார்.

மேலும் அனைவரும் இரவு உறங்கச் செல்வதற்கு முன்பு விளக்கினை அணைத்து விட்டு தான் செல்வார்கள். ஆனால் நான் விளக்கை அணைக்க மாட்டேன் பேய் பயம் கிடையாது. எனினும் இருட்டில் எனக்கு கொஞ்சம் பயம் இருக்கிறது.

லேடிஸ் சூப்பர் ஸ்டாரே இருட்டைக் கண்டு பயப்படுகிறாரா? அதனால் தான் இரவில் தூங்குவதற்கு முன்பு விளக்கை அணைக்கும் பழக்கம் இல்லையா? என்ற பேச்சு தான் தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருகிறது.

என்றாலும் சிலர் இவர் உண்மையை முழுமையாக கூறவில்லை. பயம் இல்லை என்று கூறி இருப்பது உண்மையா? இல்லையா? என்பது தெரியவில்லை. எனினும் அவருக்குள் உள் மனதில் பயம் இருப்பதின் காரணத்தால் தான் இரவில் உறங்குவதற்கு முன்பு விளக்கினை அணைக்காமல் உறங்குகிறார் என்ற விஷயத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.