“பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர சொன்ன பெற்ற தாய்..” சீரியல் நடிகை செய்த அதிர்ச்சி சம்பவம்..!

பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர சொன்ன காரணத்தினால் தன்னை பெற்ற தாய்க்கு பூ நடிகை கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் குறித்து தான் சின்னத்திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

வட நாட்டு நடிகையான அந்த சீரியல் நடிகை தமிழில் சில சீரியல்களில் தலை காட்டி இருக்கிறார். தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் பெற்று இருக்கிறார். இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சினிமாவிலும் ஒரு ரவுண்டு வருவார் என்றெல்லாம் ரசிகர்களால் கணிக்கப்பட்டது.

ஆனால் திடீரென ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட காணாமல் போய்விட்டார். என்ன விவரம் என்று சீரியல் வட்டாரங்களில் கேட்டபோது அவர்கள் கூறிய தகவல் நம்மை அதிர்ச்சி அடைய வைத்தது.

ரசிகர்கள் கணித்தது போலவே அந்த நடிகைக்கு பட வாய்ப்புகளும் வந்திருக்கின்றன. ஆனால் எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகாமலே இருந்திருக்கிறார் நடிகை. என்னவென்றால் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட்க்கு ரெடியாக இருந்தால் மட்டும்தான் அவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கும் என்ற கோரிக்கைகள் தான் அதிகமாக எழுந்திருக்கின்றன.

பல கதைகள் கேட்கும் அதற்காக சம்பளம் பேசி அட்வான்ஸ் வாங்கி ஷூட்டிங்காக டேட் கால்ஷீட் கொடுத்த பிறகு கடைசியாக படுக்கையை பகிர வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டதால் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு பட வாய்ப்பு வேண்டாம் என மறுத்திருக்கிறார் நடிகை.

இப்படியே நாட்கள் செல்ல ஒரு கட்டத்தில் நடிகையை பெற்ற தாயே பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள் நீ சீரியலில் நடித்திருக்கிறாய் என்றாலும் தற்போது வரை நாம் வாடகை வீட்டில் தான் இருக்கிறோம். சினிமாவில் உனக்கு நல்லா எதிர்காலம் இருக்கிறது என தான் பெற்ற மகளையே பட வாய்ப்புக்காக இன்னும் சொல்லப்போனால் பணத்திற்காக தவறான பாதையை காட்டி இருக்கிறார்.

தன்னுடைய தாய் இப்படி கூறியதை எதிர்பாக்காத நடிகை மனம் நொந்து போயிருக்கிறார். வேறு வழியே இல்லாமல் பல்லை கடித்துக் கொண்டு தன்னுடைய தாயுடன் இரண்டு மாத காலம் நாட்களை ஓட்டி இருக்கிறார்.

இந்த விவகாரத்தை வெளிநாட்டைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான தன்னுடைய காதலனிடம்  நடிகை கூறியுள்ளார். இதனை கேட்ட காதலன், நீ சினிமாவில் நடிக்கவே வேண்டாம் என கூறி உடனே திருமணத்திற்கு ஏற்பாடு செய்து தன்னுடைய நண்பர்கள் நான்கு பேர் முன்னிலையில் நடிகையுடன் திருமணம் செய்து கொண்டு தன்னுடைய சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று விட்டார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத தாய் தற்பொழுது வாடகை கட்ட கூட பணமில்லாமல் தன்னுடைய சொந்த ஊருக்கே பேக்கப் ஆகி இருக்கிறாராம். பட வாய்ப்புக்காக தான் பெற்ற மகளையே படுக்கையை பகிர்ந்து கொள் என்று தன்னுடைய மகளையே விற்கத் துணிந்த அம்மாவிற்கு சீரியல் கொடுத்திருக்கக்கூடிய அதிர்ச்சி வைத்தியம் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.