என்னுடைய அந்த உறுப்பில் ஓங்கி அறைந்தார்..! பிரபல நடிகை மீது ஷகீலா பகீர் குற்றச்சாட்டு..!

கடந்த 1990களில் சினிமா ரசிகர்களின் இரவு நேர தூக்கத்தை கெடுத்த கவர்ச்சி நாயகி ஷகிலாதான். ரஜினி, கமல் படம் போல ஷகிலா படங்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

துவக்கத்தில் கவுண்டமணி, ஜனகராஜ் போன்ற காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த ஷகிலா ஒரு கட்டத்தில், கவர்ச்சிக்குள் புகுந்தார்.

அவரது வாளிப்பான தேகமும், பருமனான உடலமைப்புகம், கவர்ச்சியான முக அமைப்பும் ரசிகர்களை வசீகரித்து விட்டது.

அதனால் பல தியேட்டர்களில், காலை 10 மணி காட்சிக்கும், இரவு 10 மணி காட்சிக்கும் ஷகிலா படங்களை பார்க்க கூட்டம் அலைமோதியது. தமிழில் விட கேரளாவில் ஷகிலாவுக்கு விசிறிகள் மிக அதிகம்.

ஷகீலா..

அழகு, இளமையும் இருக்கும் வரைதான் ரசிகர்கள் ரசிக்க வருவார்கள் என்ற கதை ஷகிலா விஷயத்திலும் நடந்தது. ஒரு கட்டத்துக்கு பிறகு, ஷகிலாவின் மார்க்கெட் சரிந்தது.

ரசிகர்களும் மற்ற நடிகைகளின் பக்கம் கவனத்தை திருப்பி விட்டனர். அதன்பிறகு ஷகீலா, டிவி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.

குக்வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். யூடியூப் சானல் நடத்தி, அதன்மூலம் மற்ற நடிகர், நடிகைகளை நேர்காணல் செய்து வருகிறார்.

அறைந்த சில்க் ஸ்மிதா..

சமீபத்தில் மற்றொரு யூடியூப் சேனலில் நேர்காணலில் பங்கேற்ற ஷகிலா கூறுகையில், நான் அறிமுகமான முதல் படமே சில்க் ஸ்மிதாவுடன்தான். அதில் நான் அவருக்கு தங்கையாக நடித்திருந்தேன்.

அந்த படத்தின் கதைப்படி ஒரு காட்சியில் அக்காவான சில்க் ஸ்மிதா, தங்கையான என்னை அறைய வேண்டும். அந்த காட்சி பற்றி நான் சில்க் ஸ்மிதாவிடம் முன்கூட்டியே கேட்டேன்.

அப்போது அக்கா, அந்த சீன்ல என்னை மெதுவா அடிப்பீங்களா, வேகமா அடிப்பீங்களா என்று கேட்டேன். அதற்கு அவர், அது ஷாட்டுல தானாகவே வந்துடும். அதெல்லாம் டென்சனே இல்லே, ரொம்ப ஈஸியா வந்துடும், என்றார்.

ஆனால் ஷூட்டிங்கில் அந்த காட்சி படமாக்கப்பட்ட போது, டைரக்டர் ஆக்சன்னு சொன்னதும், என் கன்னத்துல ஓங்கி பளார்ன்னு சில்க் ஸ்மிதா நிஜமாகவே அறைந்து விட்டார்.

உண்மையில் அறைந்த சில்க் ஸ்மிதாவால் நான் வலி தாங்க முடியாமல் அழுதுவிட்டேன். அந்தளவுக்கு கன்னத்தில் அடித்து விட்டார்.

அத்தனை பேர் மத்தியில் அவர் என்னை அடித்தது எனக்கு அவமானமாக இருந்தது. அதில் இருந்து எனக்கு சில்க் ஸ்மிதாவை பிடிக்காது.

ஆனால் அவர் இறந்த பிறகு அவரை பற்றி புரிந்துக்கொள்ள முடிகிறது. அவரை போன்ற சிறந்த அழகி யாருமில்லை. நல்ல திறமைசாலி என்று கூறியிருக்கிறார் நடிகை ஷகிலா.