“இப்டி பண்ணா.. உன்ன யாருடி கல்யாணம் பண்ணிகுவாங்க..” பெற்றோரால் ஓரங்கட்டப்பட்ட எருமசாணி ஹரிஜா..!

டிஜிட்டல் தளங்களில் ஆர்வம் காட்டும் சிலர், விரைவில் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடுகின்றனர். எரும சாணி என்ற சேனலில் பிரபலமானதால், எரும சாணி ஹரிஜா என்பதே அவரது அடையாளமாகி விட்டது.

ஹரிஜா

மிஸ்டர் லோக்கல், 100, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2018ம் ஆண்டில் அமர் ரமேஷ் என்பவரை ஹரிஜா திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது.

இதற்கிடையே ஹரிஜாவும், அவரது கணவர் அமர் ரமேஷூம் டைவோர்ஸ் என்ற படத்தில் நடிப்பதாக பேசப்பட்டது. ஆனால் பிறகு அந்த படம் வெளிவந்ததா இல்லையா என்பது பற்றிய தகவல் இல்லை.

கிளாமரான ஆடைகளில்…

இதற்கிடையே ஹரிஜா, அடிக்கடி தனது புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார். செம கிளாமரான ஆடைகளில் முன்னழகு, பின்னழகு தூக்கலான தெரியும் விதமாக அவரது புகைப்படங்கள் அசத்தலாக இருக்கின்றன.

எரும சாணி என்ற சானல் வழியாக தனக்கான ஒரு பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டுள்ள ஹரிஜா, கிக்கு ஏற்றும் தனது புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு, ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

ஆனால் இத்தனை கவர்ச்சி காட்டியும், சினிமாவில் பெரிய வரவேற்பை பெற முடியவில்லை என்ற ஆதங்கமும் ஹரிஜாவிடம் காணப்பட செய்கிறது.

சினிமா வாய்ப்பு

இளமை, அழகு நிறைந்த தனக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தால் இன்னும் பலமடங்கு கவர்ச்சி காட்டி, ரசிகர்களை கிறங்கடிப்பேன் என்று கூறும் விதமாக, தனது கவர்ச்சி லேட்டஸ்ட் போட்டோக்களை ஹரிஜா, பதிவேற்றம் செய்து வருகிறார்.

இதற்கிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய ஹரிஜா, தனது ஆரம்ப கால வாழ்க்கை குறித்த விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

நேர்காணல் ஒன்றில் பேசிய எருமசாணி ஹரிஜா கூறியதாவது, அப்போது நான் மீடியாவில் அறிமுகமான பீரியட். மாடலிங்கும் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்

யார் கல்யாணம் பண்ணிக்குவாங்க…

அப்பொழுது மாடலிங், நடிப்பு என்று சென்றால், உன்னை யார் கல்யாணம் பண்ணிக்குவாங்க என்று என்னுடைய வீட்டில், என்னுடைய பெற்றோரே என்னை ஓரங்கட்டி விட்டார்கள்.

ஓரங்கட்டி விட்டார்கள் என்று சொல்வதை விட அவர்கள் என்னை நினைத்து பயப்பட்டார்கள் என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.

ஒரு கட்டத்தில் என்னை நானே பார்த்துக் கொள்கிறேன். எனக்கு என்னால் தேவைகளை நானே பூர்த்தி செய்து கொள்கிறேன் என்று அவர்களிடம் கூறிவிட்டேன்.

வருமானம் வந்தது…

அதன்பிறகு நடிப்பு மாடல் இங்கே தொடர்ந்தேன். எரும சாணி சேனலில் என்னுடைய வீடியோக்கள் ரீசனாக ஆரம்பித்த பிறகு தான், எனக்கு சொல்லிக் கொள்ளும்படி வருமானம் வந்தது.

அதன் பிறகுதான், என்னுடைய வீட்டில் என்ன நம்பவே ஆரம்பித்தார்கள் என சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பதிவு செய்திருக்கிறார் எரும சாணி ஹரிஜா.

மேலும் தன்னுடைய கல்லூரியின் கடைசி இரண்டு பருவ கல்லூரி கட்டணத்தை நானே சம்பாதித்து செலுத்தினேன் எனவும், அதில் பதிவு செய்து இருக்கிறார் எரும சாணி ஹரிஜா.

மாடலிங், நடிப்புன்னு இப்டி பண்ணினா, உன்ன யாருடி கல்யாணம் பண்ணிகுவாங்க என, பெற்றோரால் ஓரங்கட்டப்பட்ட எருமசாணி ஹரிஜா, வாழ்க்கையில் ஜெயித்து காட்டியிருக்கிறார்.