ஜோதிகா பண்றது தான் கரெக்ட்டு.. சிவகுமாரின் செயலை கண்டு காறி துப்பும் நெட்டிசன்கள்.. என்ன ஆச்சு..?

திருவிளையாடல் படத்தில் பாண்டிய மன்ன் சபையில் சிவாஜி, நாகேஷ் நடித்த காட்சியில், புலவர்களே சாந்தமாக உரையாடுங்கள் என்று மன்னர் கூறும்போது, அதற்கு பதிலாக இப்படி ஒரு வசனம் வரும்.

சண்டையும் சச்சரவும் புலவர்களின் பரம்பரை சொத்து. அதை யாராலும் தடுக்க முடியாது என, சிவன் வேடத்தில் இருக்கும் நடிகர் சிவாஜி கணேசன் தனது சிம்மக் குரலில் கர்ஜித்து பேசுவார்.

நடிகர் சிவக்குமார்

அப்படித்தான் இருக்கிறது நடிகர் சிவக்குமாரின் எண்ணங்களும், பொது இடங்களில் அவர் திடீரென நடந்துக்கொள்கிற விதமும்.

ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன், செல்பி எடுக்க விருப்பப்பட்டு, சிவக்குமார் முன் செல்போனை உயர்த்திப் பிடித்த வாலிபரின் செல்போனை தட்டிவிட்டு 3ம் கிளாஸ் பையன் போல, அடாவடியாக நடந்துக்கொண்டார் சிவக்குமார்.

யோகா, தியானம், ஆசனங்கள், பிராணாயாமம், மூச்சுப்பயிற்சி, நாடி சுத்தி என ஏகப்பட்ட மனம் சார்ந்த பயிற்சிகளை தினமும் மேற்கொள்கிற சிவக்குமார், சற்றும் நிதானம் இல்லாமல், தன் வயது அனுபவம் உணராத நபராக அந்த இடத்தில் நடந்துக் கொண்டார்.

பல தகுதிகள் கொண்டவர்

எம்ஜிஆர் சிவாஜி போன்ற ஜாம்பவான் நடிகர்களுடன் நடித்த மூத்த நடிகர், சூர்யா கார்த்தி என்ற இரண்டு முன்னணி ஹீரோக்களின் அப்பா, இப்போதும் சிறந்த பேச்சாற்றல் மிக்கவர், நல்ல ஓவியர் என பல தகுதிகள் கொண்ட சிவக்குமாருடன் புகைப்படம் எடுக்க ரசிகர்கள் விரும்புவது இயல்புதான்.

தன் பெருமையை ரசிகர்கள் உணர்ந்துள்ள நிலையில், தன் பெருமை உணராமல் அவர் நடந்துக்கொண்டதற்கு, சூர்யா மன்னிப்பு கேட்டார். அந்த சம்பவத்துக்கு பிறகு அந்த வாலிபருக்கு புதியதாக செல்போனும் வாங்கிக்கொடுத்தார் சிவக்குமார்.

டேமேஜ் ஆன இமேஜ்

ஏனெனில் சிவக்குமார் செல்போனை தட்டிவிட்ட விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி பட்டிதொட்டி பரவி விட்டது. எனவே, டேமேஜ் ஆன இமேஜை பெவிகால் போட்டு ஒட்டும்படியான அந்த பதில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: சீரியலில் இழுத்து போத்திகிட்டு நடிக்கும் நடிகை வித்யா வினு மோகனா இது.. இன்னைக்கு தூங்குன மாதிரி தான்..

இப்போது மீண்டும் அதே போன்ற ஒரு தவறை செய்திருக்கிறார் சிவக்குமார். காரைக்காலில், கண்ணதாசன் மணி மண்டபத்தில் பழ கருப்பையா எழுதிய இப்படித்தான் உருவானேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் சிவக்குமார்.

சால்வையை பிடுங்கி வீசியது

அப்போது மேடையில் பேசிய சிவக்குமார், பழ கருப்பையா காலில் விழுந்து வணங்கிவிட்டு வந்து பேசினார். அதன்பிறகு மேடையில் இருந்து இறங்குவதற்காக வந்தார் சிவகுமார்.

இதையும் படியுங்கள்: உன்னோட இந்த உறுப்பில் ஒருத்தன் வந்து குத்துவான்.. அப்போ பாரு.. பிரபலத்தை மிரட்டும் பிக்பாஸ் வனிதா..!

அீப்போது அங்கு, தன்னுடைய ரசிகர் சால்வை போர்த்த நின்றதை பார்த்த போது, ஆவேசமான சிவக்குமார் அந்த சால்வையை பிடுங்கி வீசியது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

சால்வையை அன்புடன் கொண்டு வந்த அந்த ரசிகர் முகம் வாடிப்போனதை பார்த்த ரசிகர்கள் கொதித்து போய் விட்டனர்.

அது கரெக்ட்டுதான்…

ஜோதிகா செய்வதுதான் கரெக்ட்டு.. சூர்யாவை அழைத்துக் கொண்டு ஒரு தனி குடித்தனம் போனாங்களே, அது கரெக்ட்டுதான். இப்படிப்பட்ட ஆளுடன் யார் இருப்பார்கள் என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர் .