நான் என்ன பண்ணுவேன்.. எரிச்சலா இருக்கு.. 2ம் திருமணம் செஞ்சு ஒரு வாரத்துல.. அதிதி சங்கர் புலம்பல்..

மிகச்சிறந்த நடிகையாகவும், பின்னணி பாடகியாகவும் விளங்கும் அதிதி சங்கர் தமிழில் உச்சகட்ட இயக்குனர்களின் ஒருவராக திகழும் இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகளாவார்.

டாக்டர் படிப்பை முடித்திருக்கும் இவர் 2022 ஆம் ஆண்டு கார்த்தியின் நடிப்பில் வெளி வந்த விருமன் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரை உலகுக்கு அறிமுக நாயகியாக அறிமுகம் ஆனார்.

நடிகை அதிதி சங்கர்..

பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகளான அதிதி சங்கருக்கு அக்கா மற்றும் தம்பி என இரண்டு உடன்பிறப்புகள் இருக்கிறார்கள். இந்நிலையில் இவரது அக்காவிற்கு முதல் திருமணம் நடைபெற்று கருத்து வேற்றுமை காரணமாக இருவரும் தெரிந்து விட்டார்கள்.

இதையும் படிங்க: திடீர் காதல் திருமணம்.. பல வருடம் தனிமை.. கருப்பை பிரச்சனை.. Anitha மகள் Vijayakumar பேத்தி Diya

இதனை அடுத்து அண்மையில் தான் இரண்டாவது திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் சென்று இருந்தது உங்களுக்கு நினைவு இருக்கலாம்.

விருமன் படத்தில் மதுரவீரன் சாமி என்ற பாடலை சிறப்பாக பாடிய இவருக்கு தமிழக ரசிகர்களின் கூட்டம் அதிகம் உள்ளது. இந்த பாடத்தை அடுத்து மடோனா அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனோடு சேர்ந்து மாவீரன் என்ற படத்தில் நடித்திருந்தார்.

மேலும் இந்த படத்தில் இவர் வண்ணாரப்பேட்டையில் ஒரு வவ்வாலு எனும் பாடலையும் பாடி அசத்தியிருக்கிறார். தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதர்வாவின் சகோதரனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

அதிதி சங்கர் புலம்பல்..

இந்நிலையில் அதிதி சங்கர் நான் என்ன பண்ணுவ எனக்கு ரொம்ப எரிச்சலா இருக்கு இரண்டாவது திருமணம் செய்து ஒரு வாரத்திலேயே தன் அக்கா தன்னை புலம்ப வைத்து விட்டாள் என்று அதிதி சங்கர் கூறியிருக்கும் விஷயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அண்மையில் இரண்டாவது திருமணத்தை செய்து கொண்ட இவரது அக்கா ஐஸ்வர்யா பற்றி சில விஷயங்களை அதிதி சங்கர் அண்மை பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். இதில் இவர் அக்கா ஐஸ்வர்யா மற்றும் தம்பியோடு ஏதாவது ஒரு ஹோட்டலுக்கு சென்றால் என் அக்காவிடம் ஏதேனும் ஆர்டர் செய்யட்டுமா? என்று கேட்பேன் என கூறினார்.

மேலும் அப்படி கேட்கும் போது அவள் எனக்கு ஏதும் வேண்டாம் என்று கூறியிடுவாள். நானும் எனக்கு தேவையானதை ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்தால் என்னுடைய உணவை அவள் சாப்பிட ஆரம்பித்து விடுவாள். இவள் ஒரு பக்கம் இப்படி என்றால் மறுபக்கம் என்னுடைய தம்பியும் இது போல என்னுடைய உணவை எடுத்து சாப்பிட ஆரம்பித்து விடுவான் இதைப் பார்த்தால் எனக்கு ஒரே எரிச்சலாக இருக்கும் நான் என்ன பண்ணுவேன்.

சாப்பிடுவதற்கு சாப்பாடு முக்கியமா? இல்லையா? என்ற கேள்வியை எழுப்பி தற்போது புலம்பி இருக்கிறார் அதிதி சங்கர். இதற்கு உரிய விடையை அவரது அக்கா ஐஸ்வர்யா மற்றும் தம்பி கொடுத்து ஆக வேண்டும். இல்லையென்றால் இனி இது போல ஹோட்டலுக்கு செல்லும் போது அவர்களுக்கு தேவையான உணவை ஆர்டர் செய்து சாப்பிடுவதின் மூலம் இந்த எரிச்சலில் இருந்து தப்பித்து விடலாம்.

இதையும் படிங்க: எனக்கு இந்த பழக்கம் இருக்கு.. கல்யாணம் தேவையில்ல.. வெளிப்படையாக கூறிய ஆண்ட்ரியா.. விளாசும் ரசிகர்கள்..