என் மகனை தேடி வந்து அடிக்கிறாங்க.. பாதுகாப்பே இல்ல.. கதறும் ரஜினி பட நடிகர்..

தமிழ் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகர் பிர்லா போஸ். இவர் திருமதி செல்வம், பாரதி கண்ணம்மா உள்ளிட்டப் பல சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்தார்.

இவர் சின்னத்திரை மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அனைவருக்கும் பரீட்சையமானவராக இருக்கிறார்.

குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகர்களில் ஒருவராக இவர் பெரும்பாலான திரைப்படங்களில் போலீஸ் அதிகாரியாகவும், சி.ஐ.டி அதிகாரியாகவும் மிகவும் போல்டான கேரக்டரில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: கூட்ட நெரிசலில் பின்னழகை தடவிய ஆசாமி.. அத்தனை பேர் முன்னாள் காஜல் அகர்வால் கொடுத்த பதிலடி..

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், நடிகர் பிர்லா போஸின் மகனை பத்து பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக அவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

முன்னதாக காரை பார்க் செய்வதில், ஏற்பட்ட பிரச்சனையால் ஆளை கடத்தி தாக்குதல் நடித்துள்ளனர்.
சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் மாஸ் காட்டி நடித்து வரும் பிர்லா போஸ் தற்போது, ரஜினிகாந்தின் வேட்டையன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்படியான நேரத்தில் தான் இத அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது, அதாவது, பிர்லா போஸுக்கு தனது வீட்டில் வண்டியை பார்க்கில் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதில், தனது மகனை… பிரச்சனை செய்தவர்கள் கடத்தி சென்று தாக்கியுள்ளனர். இது குறித்து அவர் போலீஸில் கொடுத்துள்ள புகாரில், நான் சென்னையில் அப்பார்ட்மென்ட் ஒன்றில் வசித்து வருகிறேன்.

இதையும் படியுங்கள்: இந்த வயசுல பண்ற வேலையா இது.. தன்னை விட 20 வயது குறைந்த நடிகருடன் கஜோல்.. வாயை பிளந்த ரசிகர்கள்..

என் வீட்டுக்கு கீழ் வீட்டில் இருக்கும் பையனை பார்க்க நண்பர்கள் வந்தார்கள். அவர்கள் என் காரை சேதப்படுத்தி விட்டார்கள்.

இச்சம்பவம் நான் அவர்களிடம் கேட்க போய், அந்தப் பசங்க வயது வித்தியாசம் இல்லாமல் என்னைத் தகாத வார்த்தையில் திட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

என் மகனும் பதிலுக்கு சத்தம் போட்டான். இந்த சம்பவம் நடந்து இரண்டு மாசம் ஆச்சு. பின்னர் திடீரென போன வாரம் டியூஷன் போயிட்டு வந்த என் மகனை பத்து பேர் கொண்ட கும்பல் கடத்திவிட்டார்கள்.

அவனை மோசமாக தாக்கி இரத்தம் வெளியே வராதபடிக்கு எல்லாமே உள்காயம் ஏற்படுபடி அடித்துள்ளனர். இதை கீழ்வீட்டுப் பையன் தான் செஞ்சுருக்கான்.

இதையும் படியுங்கள்: உங்களுக்கு வயசே ஆகாதா… இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பும் 20 வயசு பெண் போல ஜெனிலியா..

இது தெரிஞ்சதுமே பதறிப்போன நான் இதுகுறித்து காவல்துறையில் புகார் கொடுத்திருக்கேன். அவங்களும் விசாரித்துள்ளனர்.

படிக்கற வயசுல மாணவர்கள் மத்தியில் இப்படி ஒரு கொடூர எண்ணம், வன்முறை உள்ளிட்டவை பார்த்து எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது என்று பிர்லா போஸ் வருத்தத்துடன் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது என் மகனை தேடி வந்து 10 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து அடிக்கிறார்கள் என்றும் என் மகனுக்கு பாதுகாப்பே இல்லை என்று கூறி கதறுகிறார் நடிகர் பிரில்லா போஸ்.